மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: திருவாவடுதுறை ஆதீன சரசுவதி மகால் நூலகம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சைவ ஆதீனங்களில் பழமை வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரை வழி வந்த குருமுதல்வர்கள் இங்கு ஆதீனத்தலைவர்களாக இருந்து இம்மடத்திற்கு உரிமையான கோயில்களையும் கட்டளை மடங்களையும் இன்று வரை பாதுகாத்து சைவ நெறி வளர்த்து வருகின்றனர். 

திருமந்திரம் அருளிய திருமூலர் இங்கு இருந்து பாடல்கள் இயற்றினார் என்பதும் யோகசமாதி அடைந்தார் என்பதனையும் கோயில் ஆதீன வரலாற்றிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

இந்தத் திருமடத்தின் நூலகம் மிகச் சிறப்பு வாய்ந்தது. சரசுவதி மகால் எனப் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பழமையான சுவடி நூல்கள் பலவும் கிடைத்தற்கறிய சிறந்த பல தமிழ் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன. 

இன்றைய வெளியீடாக மலரும் இந்த விழியப் பதிவில் நூலகத்தில் உள்ள சுவடி நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்படுகின்றது. ஆதீனப் புலவர் இந்த அறிமுகத்தை வழங்குகின்றார்.  அதில் குறிப்பாக மடாதிபதி என்னும் சொற்றொடர் விளக்கம் என்ற தலைப்பிலான ஒரு சுவடி நூல் பற்றிய அறிமுக விளக்கம் இடம் பெறுகின்றது.  அதில் ஆதீனங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சைவ ஆதீனங்கள் அனைத்தும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றியே ஆதீன அலுவல்களை முறைபடுத்துகின்றனர் என்ற செய்தியை இந்த ஒலிப்பதிவின் வழி அறிந்து கொளள முடியும். இந்த நூலை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதீனப் புலர் ஒருவர் ஆதீன கர்த்தரின் கட்டளைப்படி தயாரித்த விஷயத்தையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம். 

திருவாவடுதுறை மடத்தின் மற்றுமொரு சிறப்பு இங்கு அனையாத அடுப்பு எப்போதும் இருக்கும் என்பது. தொடர்ந்து அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது என்ற செய்தியையும் இந்த பதிவின் வழி நாம் அறியலாம்.

அது மட்டுமல்ல..மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஏட்டுச் சுவடிகளும், பல புராண நூல்களும் நிறைந்த ஒரு நூலகம் இது என்பது இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விஷயம்.  அதனையும் ஆதீனப் புலவர் பேட்டியில் குறிப்பிடுகின்றார்.

10 நிமிட விழியம் இது . பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலைப்பூவில் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014_9435.html

யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=OSrT_rMAxC8

பதிவு செய்யப்பட்ட நாள்: 28.2.2013

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்: ஜனவரி 2014: பஞ்சவன் மாதேவி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது.

அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர்.

கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக  டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுச் சென்றோம். அதில் ஒன்றே பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில்.


Inline image 1

இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. தன் சிற்றன்னை நினைவாக ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இக்கோயில் கண்டெடுக்கப்பட்டபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

பின்னர் இக்கோயிலை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்து கொடுத்து வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது. 

கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் நம்மைக் கடந்து பறந்து செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான  கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன. 

இப்பதிவின் முதல் சில நிமிடங்கள் கோயிலைக் காணலாம். பின்னர் கோயிலின் உட்புறத்தில் இருக்கும் பழுவேட்டறையர் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட நந்தியைக் காணலாம். அதோடு
  • பள்ளிப்படை என்பது என்ன? 
  • இறந்தவரின் உடலை எவ்வாறு தயார் செய்வர்? 
  • இந்த சடங்கு முறை எந்த  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?
..போன்ற விவரங்களை டாக்டர்.பத்மா தொடர்ந்து வழங்குவதையும் காணலாம்.

அற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக்கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை. 

கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014_26.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=T6bTOyTCGoM



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 26/1/2014 *புதுவை வித்வான் செ.சவராயலுநாயகரவர்கள் மாலை*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

புதுவை வித்வான் செ.சவராயலுநாயகரவர்கள் மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 368

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


திருவாவடுதுறை திருமடத்தின் நூலகத்தில் சுவடிக் கட்டுகள்.



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


Former cop-yoga guru takes up pen

0 மறுமொழிகள்

A Selvaraj TNN 

Chennai: He is, in his own words, single-handedly responsible for meditation sessions in Puzhal Central Prison that made “hardened criminals melt like wax and their agitated minds crave for peace”. 

    So too for green-thumb therapy to becalm the senses of the felons, making them one with the earth as they raked furrows in the prison garden, planted, tended and harvested vegetables — and for adding to the skills of the inmates that got them in the slammer by opening a prison bakery and teaching them how to bake. 

    Satish Kumar Dogra was a most unusual policeman. The 1982-batch IPS officer used curious methods to reform the state’s prison system. But they worked, and by the time he retired on December 31 as assistant director general police (prisons), he had brought about more change in jails in Tamil Nadu than any of his predecessors. 

    Dogra made the inmates gather for meditation and yoga sessions within the cold steel and concrete of the prison. During these sessions, Dogra says, he taught the prisoners meditation techniques that opened the Sahasrara chakra, the seventh primary chakra, detaching them from the illusions of the sensory 
world. The sessions, which started in 2011, soon became extremely popular. After all, if one is all and all is one and all is illusion, so too were the prison walls — at least while they meditated. 

    Soon enough, Dogra was taking multiple classes with groups of nearly 300 prisoners each. 

    “The inmates’ attitude with me was no longer that of a prisoner towards a police officer, but of a devotee towards his spiritual guru,” Dogra says of the meditation sessions. “Even a few seconds of meditation redirects the flow of current in the brain. The prisoners’ aggressive tendencies faded away.” 

    “The effect was tremendous and amazed me. I hadn’t expected such dramatic results,” he says. “The deep sense of peace they felt by focusing their consciousness within the chakra made them seek the experience regularly.” 

    The sittings also made Dogra a confidant. “In private conversations with me some prisoners confessed things they would have never dared to divulge to a police officer. They trusted me and knew that I was their well-wisher,” Dogra says. 

    Alongside the meditation sessions, he also started regular workouts and classes for prisoners who wanted to gain an education, a prison official says. The warders became instructors and worked hard to prepare for classes. 
    “Some of them even wore ties and looked like professors,” he says. 
    The former officer’s humility and his beneficence to the prisoners won him the appreciation of several senior police officers. 

    Now that he has been put out to pasture, Dogra, who loves literature and languages, has decided to devote his time to writing books and poems. 

    “Each language has its own beauty. When I’m in the mood to read Tamil, I pick up Kamba Ramayanam, or Thirukkural,” Dogra says. “At other times I may be found reading the Gita in Sanskrit or aShakespeare play.” 

    The former ADGP, who speaks Tamil fluently, has instructional videos on Tamil grammar on YouTube. Dogra also offers Tamil, English and Punjabi translations of the Gita on the video-sharing website, poems he has composed and even — we are not making this up — ‘Stress Management Through Garbage Clearing (Tamil Version)’. 

    selvaraj.a@timesgroup.com
courtesy:http://epaper.timesofindia.com/


Former IPS officer S K Dogra at his residence


THF Announcement: ebooks update: 12/1/2014 *குளத்தூர்க் கோவை*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

குளத்தூர்க் கோவை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 367

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

குறிப்பு: நூலின் இடைப்பகுதி 2 பக்கங்கள் ஒரு பக்கமாக வருவது போல பிடிஎப் செய்யப்பட்டுள்ளது. ஆக அப்பக்கங்களை திருப்பிக் கொண்டால் வாசிக்க முடியும்.


திருமூலர் சன்னிதிக்குச் செல்லும் பாதை. முன்னால் இடது புறம் தெரியும் கோயிலே திருமூலர் சன்னிதி.



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: ஜனவரி 2014: டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்களுடனான பேட்டி

0 மறுமொழிகள்
வணக்கம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இன்றைய பண்டிகை நாளின் சிறப்புக்கு அணிகலனாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு விழியப் பதிவை வெளியிடுகின்றோம். 

  • மலேசிய இந்தியர் சமூக, மற்றும் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அரசியல் தலைவர்...
  • மலேசிய அமைச்சில் மிக  நீண்ட காலம் அமைச்சராகப் பணியில் இருந்தவர் என்ற கூடுதல் தகுதியும் கொண்டவர்..
  • சாதனைத் தலைவர் என பெருமையுடன் அழைக்கப்படும் தமிழர்..
டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்கள்!

இந்தியர்களின் மலேசியாவுக்கானத் தொடர்பு என்பது புதிதானதல்ல. கிபி 2ம் நூற்றாண்டு தொடங்கி புத்த மதம் பரப்ப அனுப்பட்ட பலர் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது போலவே மலேசியாவிற்கும் வந்தனர். இந்திய-மலாயா கடல் வணிகமும் அப்போது  மிகப் பிரபலமாக இருந்தது. இது நீண்ட காலம் நீடித்தும் வந்தது. அதன் பின்னர் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான படையெடுப்பு இங்கு தமிழர் பாரம்பரியத்தையும் ஹிந்து சமயத்தையும் மேலும் பரவச் செய்தது. அதற்குப் பின்னர் மீண்டும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி வணிகம் செய்யவும், தண்டவாளம் அமைக்கவும் ரப்பர் செம்பனை தேயிலைக் காடுகளில் கூலிகளாகப் பணிபுரியவும், அரசியல் கைதிகளாகவும் என பல்வேறு பரிமாணங்களில் தென்னகத் தமிழர்கள் மலாயா வர அன்றைய ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி வழி அமைத்துக் கொடுத்த்து.

இச்சூழலில் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் மலாயா இருந்தது. இந்த நாட்டின் பெரிய மூன்று பெரும்பான்மை இனங்களான மலாய், சீன, இந்தியர்கள் மத்தியில் படிப்படியாக நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற பல அரசியல் நடவடிக்கைகள் தோன்றியன. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் சுதந்திர தாகம் மிக ஆழகாமப் பரவி பல அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டன. 

மலேசியாவின் அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி என்ற பெருமையைப் பெருவது மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா)  Malaysian Indian Congress (MIC). 1946ம் ஆண்டு இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரு ஜோன் திவி (1946 - 1947) அவர்கள். இவருக்குப் பின்னர் தலைவர்களாக பட் சிங் (1947 - 1950), ராமனாத செட்டியார்(1950 - 1951), குண்டன்லால் (1951 - 1955), தேசியத் தோட்டப்புற தந்தை என பரவலாக அழைக்கப்பட்ட, தமிழர்களுக்கு மிகப் பல தொண்டாற்றிய துன் வி.தீ.சம்பந்தன் (1955 - 1973), டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வீ மாணிக்கவாசகம் (1973 - 1979) என்ற தலைவர்கள் வரிசையில் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் டத்தோ ஸ்ரீ சாமி வேலு சங்கிலிமுத்து அவர்கள். 1979 முதல் 2010 வரை, ஏறக்குறைய 31 ஆண்டுகள் இந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கட்சிக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் சேவை செய்தவர் இவர்.

மலேசியத் தமிழர் நலன் தேவைகளுக்காக ம இ கா என்பதோடு நின்று விடாமல் நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். இவரது காலத்தில் தான் மலேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இருக்கும் மலேசியா முழுமைக்குமான வடக்கு-தெற்கு, கிழக்கு மேற்கு என அனைத்து நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. வடக்கில் தாய்லாந்திலிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரை செல்லும் தரம் வாய்ந்த சாலை அமைந்ததும் இக்காலகட்டத்தில் தான்.

மிகச் சாதரண குடும்பத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்டிடத்துறை ஆர்க்கிடெக்டாக கல்வியில் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக நலனில் ஆர்வம் கொண்டு  அரசியல் கட்சியில் ஈடுபட்டு படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இவர். இன்று இவரது முயற்சியில் மலேசியத் தமிழ் மாணவர் நலனுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் கடாரம் என்று நாம் முன்னர் அறிந்த கெடா மானிலத்தில் AIMS  என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது. 

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களது விழியப் பதிவு பேட்டியே இன்றைய பொங்கல் தின சிறப்பு வெளியீடாக மலர்கின்றது. 

அக்டோபர் மாத இறுதியில்  மலேசியாவில் 28.10.2013 அன்று டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களின் அமைச்சரக அலுவலகத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்டது. 

பேட்டி காண்போர்: முனைவர்.க. சுபாஷிணி , டாக்டர்.நா.கண்ணன்
பேட்டி கேமரா ஒலிப்பதிவு: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.க. சுபாஷிணி 

இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்கள் 
  • ம இ கா வின் வரலாறு
  • தமிழிலேயே அரசியல் கூட்டங்கள் நிகழ்த்தும் வகையில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான பல முயற்சிகள்
  • சமூக மேம்பாட்டிற்கு கல்வி
  • தமிழர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் - AIMS  பல்கலைக்கழக உருவாக்கம்
  • தனது இளமை கால அனுபவங்கள்
  • இந்திய சுதந்திர நடவடிக்கைகள் மலாயாவில் ஏற்படுத்திய தாக்கம் 
  • மலேசிய சாலை அமைப்பு  - இந்தியாவில் மலேசிய சாலை அமைப்பு முயற்சிகள்
என பல்வேறு விஷயங்களை விளக்குகின்றார்.

இந்தப் பேட்டியைக் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014.html

யூடியூபில் இப்பேட்டியைக் காண: http://www.youtube.com/watch?v=iq2F6ZBMRLU

Inline image 1
 டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களுடன் பேட்டியின் போது


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]


தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பு வெளியீடு - டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்களுடனான பேட்டி

0 மறுமொழிகள்
வணக்கம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இன்றைய பண்டிகை நாளின் சிறப்புக்கு அணிகலனாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.


  • மலேசிய இந்தியர் சமூக, மற்றும் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அரசியல் தலைவர்...
  • மலேசிய அமைச்சில் மிக  நீண்ட காலம் அமைச்சராகப் பணியில் இருந்தவர் என்ற கூடுதல் தகுதியும் கொண்டவர்..
  • சாதனைத் தலைவர் என பெருமையுடன் அழைக்கப்படும் தமிழர்..

டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்கள்!

இந்தியர்களின் மலேசியாவுக்கானத் தொடர்பு என்பது புதிதானதல்ல. கிபி 2ம் நூற்றாண்டு தொடங்கி புத்த மதம் பரப்ப அனுப்பட்ட பலர் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது போலவே மலேசியாவிற்கும் வந்தனர். இந்திய-மலாயா கடல் வணிகமும் அப்போது  மிகப் பிரபலமாக இருந்தது. இது நீண்ட காலம் நீடித்தும் வந்தது. அதன் பின்னர் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான படையெடுப்பு இங்கு தமிழர் பாரம்பரியத்தையும் ஹிந்து சமயத்தையும் மேலும் பரவச் செய்தது. அதற்குப் பின்னர் மீண்டும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி வணிகம் செய்யவும், தண்டவாளம் அமைக்கவும் ரப்பர் செம்பனை தேயிலைக் காடுகளில் கூலிகளாகப் பணிபுரியவும், அரசியல் கைதிகளாகவும் என பல்வேறு பரிமாணங்களில் தென்னகத் தமிழர்கள் மலாயா வர அன்றைய ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி வழி அமைத்துக் கொடுத்த்து.

இச்சூழலில் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் மலாயா இருந்தது. இந்த நாட்டின் பெரிய மூன்று பெரும்பான்மை இனங்களான மலாய், சீன, இந்தியர்கள் மத்தியில் படிப்படியாக நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற பல அரசியல் நடவடிக்கைகள் தோன்றியன. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் சுதந்திர தாகம் மிக ஆழகாமப் பரவி பல அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டன.

மலேசியாவின் அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி என்ற பெருமையைப் பெருவது மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா)  Malaysian Indian Congress (MIC). 1946ம் ஆண்டு இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரு ஜோன் திவி (1946 - 1947) அவர்கள். இவருக்குப் பின்னர் தலைவர்களாக பட் சிங் (1947 - 1950), ராமனாத செட்டியார்(1950 - 1951), குண்டன்லால் (1951 - 1955), தேசியத் தோட்டப்புற தந்தை என பரவலாக அழைக்கப்பட்ட, தமிழர்களுக்கு மிகப் பல தொண்டாற்றிய துன் வி.தீ.சம்பந்தன் (1955 - 1973), டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வீ மாணிக்கவாசகம் (1973 - 1979) என்ற தலைவர்கள் வரிசையில் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் டத்தோ ஸ்ரீ சாமி வேலு சங்கிலிமுத்து அவர்கள். 1979 முதல் 2010 வரை, ஏறக்குறைய 31 ஆண்டுகள் இந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கட்சிக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் சேவை செய்தவர் இவர்.

மலேசியத் தமிழர் நலன் தேவைகளுக்காக ம இ கா என்பதோடு நின்று விடாமல் நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். இவரது காலத்தில் தான் மலேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இருக்கும் மலேசியா முழுமைக்குமான வடக்கு-தெற்கு, கிழக்கு மேற்கு என அனைத்து நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. வடக்கில் தாய்லாந்திலிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரை செல்லும் தரம் வாய்ந்த சாலை அமைந்ததும் இக்காலகட்டத்தில் தான்.

மிகச் சாதரண குடும்பத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்டிடத்துறை ஆர்க்கிடெக்டாக கல்வியில் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக நலனில் ஆர்வம் கொண்டு  அரசியல் கட்சியில் ஈடுபட்டு படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இவர். இன்று இவரது முயற்சியில் மலேசியத் தமிழ் மாணவர் நலனுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் கடாரம் என்று நாம் முன்னர் அறிந்த கெடா மானிலத்தில் AIMS  என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களது விழியப் பதிவு பேட்டியே இன்றைய பொங்கல் தின சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

அக்டோபர் மாத இறுதியில்  மலேசியாவில் 28.10.2013 அன்று டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களின் அமைச்சரக அலுவலகத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்டது.

பேட்டி காண்போர்: முனைவர்.க. சுபாஷிணி, டாக்டர்.நா.கண்ணன்
பேட்டி கேமரா ஒலிப்பதிவு: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.க. சுபாஷிணி

இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்கள்

  • ம இ கா வின் வரலாறு
  • தமிழிலேயே அரசியல் கூட்டங்கள் நிகழ்த்தும் வகையில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான பல முயற்சிகள்
  • சமூக மேம்பாட்டிற்கு கல்வி
  • தமிழர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் - AIMS  பல்கலைக்கழக உருவாக்கம்
  • தனது இளமை கால அனுபவங்கள்
  • இந்திய சுதந்திர நடவடிக்கைகள் மலாயாவில் ஏற்படுத்திய தாக்கம் 
  • மலேசிய சாலை அமைப்பு  - இந்தியாவில் மலேசிய சாலை அமைப்பு முயற்சிகள்

என பல்வேறு விஷயங்களை விளக்குகின்றார்.

இந்தப் பேட்டியைக் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014.html

யூடியூபில் இப்பேட்டியைக் காண: http://www.youtube.com/watch?v=iq2F6ZBMRLU


 டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களுடன் பேட்டியின் போது


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 12/1/2014 *ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது*

2 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்/ தொகுப்பு:

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 366

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


திருமூலர் சன்னிதியின் உள்லே திருமூலர் உருவச் சிலை.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 6/1/2014 *திருக்கற்குடிமாமலை மாலை*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்/ தொகுப்பு:

திருக்கற்குடிமாமலை மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 365

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


திருமூலர் மண்டபத்தின் உட்பகுதியின் படம் இது. இந்த மண்டபம் திருவாவடுதுறை மடத்தினுள்ளேயே அமைந்திருப்பது. திருமூலரின் வாழ்க்கை குறிப்பை விளக்கும் சுவர் சித்திரங்கள் வலது இடது புற சுவர்களில் தீட்டப்பட்டிருக்கின்றன. பளிங்குக் கற்களினால் ஆன தரைப்பகுதி இருப்பதனால் குளிர்ச்சியான சூழலை தருகின்றது இந்த மண்டபம். அமர்ந்து தியானம் செய்ய மிக ஏற்ற இடம்.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES