THF Announcement: E-books update:25/8/2017 *இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு

0 மறுமொழிகள்


வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான செப்பேடு ஒன்றின் செய்திகள் முழுமையாக   மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
வாசித்து அளித்தவர்: முனைவர் வள்ளி சொக்கலிங்கம், காரைக்குடி



நூலைப் பற்றி

இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம்  ஆகும்.  இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.  இதற்கானச் செப்புப் பட்டயம் ஒன்று  உள்ளது. இதனை வாசித்து அதில் உள்ள தகவல்களைப் பதிவாக வழங்கியிருக்கின்றார் இராமசாமி தமிழ்க்கல்லூரியின் முன்னாள் முதல்வர் காரைக்குடி முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள். இந்த நூலை நமக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் முனைவர்.காளைராசன்.   இவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 465


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


THF Announcement: E-books update:20/8/2017 *Kindergarten Room - மழலையர் பாடல்கள்

5 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  Kindergarten Room - மழலையர் பாடல்கள்
ஆசிரியர்:    ராவ் பகதூர் எம்.சி.ராஜா M.L.A., F.M.U. , திருமதி. ரங்கநாயகி அம்மையார்
ஆண்டு: 1930






நூலைப் பற்றி

​தமிழகத்தில் மிக நீண்ட காலமாகப் பாடப்படும் கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு என்கின்ற பாடல் உட்பட, பல மழலையர் பாடல்கள் இன்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அந்தப் பாடல்களை எழுதிய ஆசிரியர் யார் என்பது இது வரை பேசப்படாது இருந்து வந்தது. அந்த மர்மத்துக்கு விடை இதோ.

அந்தப் பாடல்கள் அடங்கிய கிண்டர்கார்டன் ரூம் என்கின்ற தொகுப்பினை எழுதியவர் தமிழகத்தின் மிக முன்னோடியான அரசியல் தலைவர் மற்றும் நீதிக் கட்சி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்,  இந்தியாவில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தலைவர், எனப்பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற  மயிலை சின்னத்தம்பி ராஜா எனப்பட்ட ராவ் பகதூர் எம்.சி.ராஜா அவர்கள் தான். இவரோடு இணைந்து கல்வியாளர் திருமதி. ரங்கநாயகி அம்மையார் அவர்களும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.

இந்தப் புத்தகம் 1930ம் ஆண்டு முதல் பதிப்பு கண்டது. அப்போது அதன் விலை 8 அணா.  அதற்குப் பிறகு பள்ளி நூல்களிலும் பள்ளிப் பாடப்புத்தக நூல்களிலும், இந்த நூலில் உள்ள பல பாடல்கள்,  மக்களின் வாய்மொழிப் பாடல்களாகவும் பண்பாடாகவும் மாறி விட்டது.  தமிழகம் மட்டுமன்றி தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார்களோ, அங்கெல்லாம் இப்பாடல்களைக் கொண்டு சென்றதால், உலகம் முழுவதும் சிறுவர்கள் பயின்று பாடும் பாடல்களாக இன்றும் இவை உள்ளன. 

அந்த வகையில், மிக நீண்ட காலம் மறு பதிப்பு செய்யப்படாத இப்புத்தகம், தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் வெளியீடாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நூலைப் பாதுகாத்து வைத்த சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்கு எமது நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 464

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக முன்னுரை ஒன்றினையும் எழுதி வழங்கியவர்: திரு.கௌதம சன்னா

அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​



THF Announcement: E-books update:13/8/2017 *எழிலரசி கிளியோபாட்ரா

1 மறுமொழிகள்
 வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நாடக  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  எழிலரசி கிளியோபாட்ரா
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா



நூலைப் பற்றி:
இது ஒரு நாடக நூல். தமிழில் நாடகபானியிலான படைப்புக்கள் குறைந்து வரும் இவ்வேளையில் இந்த நாடக நூல் கிளியோபாட்ரா எனும் புகழ்மிக்க அரசியின் வாழ்வில் நடந்த சில செய்திகளைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 463

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES