திருப்பாவை - 12

0 மறுமொழிகள்
திருப்பாவை - 12

விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?




கேதார கெளள ராகம் , ஆதிதாளம்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம் நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.

Thiruppavai - 12
Raga: Kedaragowla, Adi

O sister of a fortune-favored cowherd who owns cows with
boundless compassion, that pour milk from their udders at the
very thought of their calves, whose house is muddy due to shushing of milk.
We stand at your door step with dew dropping on our heads.
Come open your mouth and sing the praise of the lord dear to our heart,
who in anger slew the king of Lanka.
Atleast now wake up, why this heavy sleep ?
People in the neighbour know about you now!.





[ Picture shows Andal speaks to the girl about Rama and the episode how he killed Ravana. Andal also tells her heavy sleep may give people the impression of some transgression or impropriety on her part. She may incur the wrath of the neighbourhood folk, who wait impatiently in the porch below]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 11

0 மறுமொழிகள்
திருப்பாவை - 11



அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?
உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்
பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!
பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா
உறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்
உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.
அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே!
உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்!



Thiruppavai - 11
Raga: Huseni, Misra chapu

O Golden bower of the faultless Kovalar folk
who milk many herds of cows, and battle victoriously in wars
O snake slim-waisted peacock-damsel!
come join us ! The neighborhood playmates have all gathered in your portion to sing the names
of the cloud-hued lord.
You lie, motionless and still
O precious maid, what sense does this make ?
come quickly

[ Picture shows, the door is open, some girls have collected outside and are chanting the lords name. The girl in the bed lies without speaking, without moving. Andal hints gains power by very auspicious adjectives she juxtaposes to wake the girl]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 10

1 மறுமொழிகள்
திருப்பாவை - 10

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!
தோடி ராகம் , ஆதிதாளம்



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.


நோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்
யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்
தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!



Thiruppavai - 10
Raga: Todi, Adi

O cousin entering high heaven through vows
will you not answer nor open the doors ?
In the days of yore, Kumbhakarna fell into the jaws of death
through our blessed boom giver, Narayana who wears the
fragrant Tulasi on his head
But did the demon then bequeath his sleep to you ?
O rare gem of immense stupour
Come quickly, open the door.

[ Picture shows Andal reminding her of Kumbahakarna, and tells her that joy awaits the girl only if she continues the vows for the month with faith.]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 09

0 மறுமொழிகள்
திருப்பாவை - 9

மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்!
ஹமீர்கல்யாணி ராகம் , ஆதிதாளம்



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு
அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள்
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது
சீக்கிரம் உன் மகளை எழுப்பு

Thiruppavai - 9
Raga: Hamir Kalyani, Adi

O cousin sleeping in a sparkling hall on a soft bed with lamps glowing
and incense wafting all around!
Please unlatch your belled door.
My good Aunt, could you wake your daughter
Is she dumb, or deaf or fatigued or has a spell been cast on her ?
Let us chant Mayan, Madhavan, Vaikundan and many such names
Come, join us!

[ In the Picture Andal is seen talking to the girl's mother at their door gently reminding that a joy greater than heavenly bedroom awaits the girl, if she would open her lips and ears to chant the lords praise. The girl in an air opulence and luxury in the panel above]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 08

0 மறுமொழிகள்
திருப்பாவை - 8

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி
தன்யாசி ராகம , மிச்ரசாபு தாளம்



கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி
உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்
நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.

Thiruppavai - 8
Raga: Dhanyasi, Misra Chapu

The Eastern horizon brightens; buffaloes wander
out to gaze the dew-tipped morning grass.
The other girls were keen to go but we made them wait.
and came to call you. Dainty girl, wake up and join the band
Krishna ripped the horse's jaws and killed the wrestlers.
If we go and approach him with our prayers
he will listen in attention and bestow his grace

[ Picture shows the buffalos grazing on the morning grass fresh with dew. The girl prefers comfort. Andal reminds her that there are other who were make to wait for her sake]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 06

0 மறுமொழிகள்
திருப்பாவை - 6

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்
சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம்



புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.


Thiruppavai - 6
Raga : Sankarabharanam, Misra Chapu

Look the birds have begun their morning song
O young girl arise! Do you not hear the great boom of the white temple conch
He who drained the ogress Putana's poisoned breasts and
kicked the cart that ran amuck,
He lies reclining in the Ocean.
Sages and Yogis hold him in their hearts and gently utter "Hari".
This sound enters our hearts and makes us rejoice.

[Picture shows that the birds have arisen, the priest blowing the temple conch, ascetics are worshipping the lord. In the panel above, a girl lies in her sumptuous bed. Andal rouses her by touching her gently.]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 07

0 மறுமொழிகள்
திருப்பாவை - 7

பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?

பைரவி ராகம , மிச்ரசாபு தாளம்



கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட
கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக

Thiruppavai - 7
Raga: Bhairavi, Misra Chapu

Devilish Girl! do you not hear
the grey-birds(seven-sisters) screeching in chorus ?
Do you not hear the butter pail of fragrant-haired
milkmaids, their bangles and charms jingling merrily as they churn ?
O noble born girl, do you still lie in bed listening
while we stand and sing in praise of Narayana, Kesava ?
Bright girl! Open the door quickly

[ Picture shows Andal and her friends go to another firend's house. One calls her a devilish girl and points to the "seven-sisters" that screech. Another calls her a wealthy noble and points to the bracelets and charms of the milkmaids that resound like her wealth. Andal calls her a bright girl and reminds her of Narayana-murti, the ever-fresh icon of the lord in the temple]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 05

0 மறுமொழிகள்
திருப்பாவை - 5

கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்
ஸ்ரீ ராகம் , ஆதிதாளம்



மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.

மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம் முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும் ஆகவே அவன் நாமங்களைச் சொல்!



Thiruppavai - 5
Raga : Sri, Adi

Kirshna, prince of Northern Mathura
who haunts the clean banks of Yamana
who took birth like a beacon among the cowherd clan
the jewel of his mother's womb
if we come pure and strew fresh flowers
with songs on our lips, feeling in our hearts
then he will forgive our past misdeeds and even what remains
will disappear like cotton unto fire
So come, let us praise him

[Picture shows Andal herself being worshipped, alongside Rangammannar her consort as in the temple at Srivilliputtur ]


src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?

soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_05.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&

rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au

tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash'

wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 04

0 மறுமொழிகள்
திருப்பாவை - 4

மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்
வராளி ராகம் , ஆதிதாளம்
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.



வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்

Thiruppavai - 4
Raga : Varali, Adi

O lord Varuna Pray reveal yourself in full measure
Enter the deep ocean, gorge yourself roar and ascend high
darken like the hue of Padmanaba
strike lightning like the discus on his hands
roar with thunder like his great conch
come pouring down on us like arrows cast from his Sarnga bow
that we too may live and
enjoy the bath-festival of Margazhi

[ Picture shows Andal praying to the cloud lord for rains. Seen in the picture is Vishnu with his conch and discus]




src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?

soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_04.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&

rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au

tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash'

wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 03

0 மறுமொழிகள்
திருப்பாவை - 3

உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்
ஆரபி ராகம், ஆதிதாளம்



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்
நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

Thiruppavai - 3
Raga : Arabbi, Adi

Praise him who measured the three worlds in two strides,
If we take bath for our winter's vow ( pavai nonbu)
The monsoon shall not fail this fertile land,
but bring forth golden heads of paddy
In the still waters of the fields, tiny fish will jump and dance enchanted
Dreamy bees will fall asleep amidst the petals of lotus.
Udders of our cows so grand shall scarce be held in our milking hand
Abiding wealth shall be ours, come!.

[Picture shows Andal and her friends are seen singing Vishnu's praise, in his Thiruvikarma or "Universe striding" form seeking abiding wealth and prosperity]



src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?
soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_03.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&
rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au
tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash' wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 02

0 மறுமொழிகள்
திருப்பாவை - 2

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்



வஸந்த ராகம், ஆதிதாளம்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்
இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.



Thiruppavai - 2

Raga : Vasantha, Adi

O people of the world, hear what austerities we undertake during the pavai-nonbu
Singing the praise of the Ocean reclining lord.
We will abstain from milk and ghee and bathe before dawn.
We shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers.
Refraining from forbidden acts, avoiding evil tales about others, we give alms and charity in full measure and
pray for the elavation of spirit. Let us rejoice.\\
[ Picture shows Andal is seen teaching the regimen of the pavai Nonpu to two aspiring friends. Vishnu lies floating on a the deluge waters on a fig leaf. He is attended by his sposes Sri Bhu and Nila ]



src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?

soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_02.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&

rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au

tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash'

wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 01

0 மறுமொழிகள்
திருப்பாவை - 1

நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல்




பெளளி ராகம், ஆதிதாளம்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*)

மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\\

(*) திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப் பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" ( திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது




Thiruppavai - 1

Raga: Bowli, Adi

In the Month of Margazhi of auspicious full-moon day
bejeweled girls who would join us for the bath!
come along prosperous young girls of Ayarppadi
Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and fierce
deeds ( towards enemies)
He is the darling-child, lion-cub of beautiful-eyed Yosada.
our dark-hued, lotus-eyed, radiant moon-faced Narayana alone will grant us our boons.
Girls come assemble for the paavai nonbu and win the world's praise.\\

[Picture shows Andal is extending an invitation to all the folk in her village to join her in the Margazhi bath festival. Krishna, the foster child of Yesodha and Nandagopala is identified with Narayana the cosmic lord Vishnu. He has four arms, bears the conch and discus, and sits on a serpent couch in Vaikuntha, guiding the souls seeking him. His consorts Bhu and Nila, seated on either side attend him.]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி
உபன்யாசம்: வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

0 மறுமொழிகள்
தமிழ்மணி - பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்


"சோழவளநாடு சோறுடைத்து" என்பர் புலவர்.

ஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது.

பழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.



உ.வே.சா. போலவே இவரும் சங்க நூல்களை உரையோடு வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார்.

நாராயணசாமி
நூலாசிரியராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும்
உரையாசிரியராகவும்
விளங்கினார்.

இவர் எழுதிய "நற்றிணை" உரையே இவர் புகழை காலா காலத்துக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

இலட்சுமி நாராயண அவதானிகள் என்னும் இயற்பெயர் கொண்ட நாராயணசாமி ஐயர், தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் 1862ம் ஆண்டு ஆவணித் திங்கள் 29ம் நாள் பிறந்தார்.

இவருடைய தந்தையார் வேங்கடகிருஷ்ண அவதானிகள் எனவும் அப்பாசாமி ஐயர் எனவும் அழைக்கப்பட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். இவரது தந்தையார் மருத்துவ நூலில் சிறந்த பயிற்சி உடையவர்.

நாராயணசாமி ஐயருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். ஆண்மக்கள் நான்கு பேர்; பெண்மக்கள் மூன்று பேர். ஆண்களுள் இவரே மூத்தவர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை இவரது அத்தையே மேற்கொண்டார்.

இவர் பள்ளிக் கல்வியை உரிய காலத்தில் ஒழுங்காகக் கற்றார். பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த முத்துராம பாரதியாரிடம் தமிழ் படித்தார். அக்காலத்தில் மன்னார்குடியில் இருந்த தமிழ்ப் பெரும் புலவர் நாராயணசாமி பிள்ளையின் இராமாயண விரிவுரையைக் கேட்டு தமிழின் மேல் பற்று கொண்டார். இந்நிகழ்ச்சியே இவருடைய தமிழ்ப் பயிற்சிக்குக் காரணமாய் அமைந்தது. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தை வாங்கி வாசித்தார். இவர் தமிழ் மொழியைப் கற்கவேண்டும் என்ற பேரவாவினால் எப்போதும் நூலும் கையுமாகவே இருந்தார். இதை குடும்பத்தார் விரும்பவில்லை.

இதனால் இவர் அத்தைக்குத் தெரியாமல் வயல் வரப்புகளுக்குச் சென்று கருவேல மரங்களுக்குக் கீழே அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தமிழ் படித்துக் கவிபாடும் ஆற்றலில் சிறந்து விளங்கினார். தமிழ் இலக்கியங்களைத் தாமே தனித்திருந்து கற்றபடியால் ஐயப்பாடுகள் உண்டாயின. அவற்றைக் களைந்து கொள்வதற்கு காலத்தை எதிர்பார்த்திருந்தார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகரும், "வித்வ சிரோமணி" என்னும் சிறப்புப் பெயர் பெற்றவருமாகிய பொன்னம்பலப் பிள்ளை என்பவர் தமிழ் அறிஞராக விளங்கினார். அவர் சிறிதுகாலம் திருமறைக்காட்டில் வந்து தங்கினார். நாராயணசாமி ஐயர் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் தம்முடைய ஐயங்களைப் போக்கிக்கொண்டார். மேலும், அவரிடம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும் பாடம் கேட்டார்.

இவர் மொழிநூல் புலமையோடு, புதிய நூல் படைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். "நீலகண்டேசுரக் கோவை" என்னும் கோவை நூல் பாடி, மன்னார்குடியில் தமிழறிஞர் பொன்னம்பல பிள்ளையின் முன்னிலையில் அரங்கேற்றினார். அத்துடன் அவர் வடமொழியும் கற்று புலமைப் பெற்றிருந்ததால், வடமொழியில் காளிதாசர் இயற்றிய பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

தமிழ் நாட்டின் பழைய வரலாறுகளையும், பெருமைகளையும் தேடி ஆராய்வதில் பெருவிருப்பம் கொண்டவராகவும், கோயில்களிலும், வரலாற்றுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
தமிழ்ப் புலவர்களின் வரலாறுகளை நன்கு அறிந்தவர். அவர்கள் பாடிய செய்யுள்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்க வல்லவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இவருக்குச் சிறந்த பயிற்சி இருந்தது. அதில் காட்டியிருந்த மேற்கோளுக்கெல்லாம் அகரவரிசை ஒன்றை இவர் எழுதி வைத்திருந்தார்.

நீலகண்டேசுரக் கோவை
பிரகசன நாடகம்
இடும்பாவன புராணம்
இறையனாராற்றுப்படை
சிவபுராணம்
களப்பாள் புராணம்
அரதைக் கோவை
வீரகாவியம்
சிவகீதை
நரிவிருத்தம்
மாணாக்கராற்றுப்படை
இயன்மொழி வாழ்த்து
தென்தில்லை உலா
தென்தில்லைக் கலம்பகம்
பழையது விடு தூது
மருதப்பாட்டு
செருப்புவிடு தூது
தமிழ் நாயக மாலை
இராமாயண அகவல்
நற்றிணை உரை

என்பன இவரால் இயற்றப்பட்டவை.

1899ம் ஆண்டு முதல் இவர் மறையும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலங்களில் சங்க இலக்கியங்களில் தனிக்கவனம் செலுத்தினார். குறுந்தொகையை நன்றாக ஆய்வு செய்தார். அப்போது, நற்றிணைக்கு உரையெழுதி முடித்துவிட்டார். அகநானூற்றுக்கு உரை எழுதிக் கொண்டிருந்தார்.
நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருக்கும்பொழுது நாராயணசாமி ஐயருக்கு நீரிழிவு நோய் மிகுதியானது. இறப்பதற்குள் நற்றிணை உரை நூலைக் கண்ணால் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது அவருடைய இறுதி விருப்பமாக இருந்தது. ஆயினும் அவ்விருப்பம் நிறைவேறவில்லை.

1914ம் ஆண்டு ஜூலை 30ம் நாள் தமது பிறந்த ஊராகிய பின்னத்தூரில் காலமானார்.
இவர் எழுதிய நற்றிணை உரை தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவர் இயற்றிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த இழப்பு அவருக்கல்ல; தமிழுக்குத்தான்!

எந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழ்த் தொண்டாற்றி மறைந்துபோன அவர் இன்று உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது உழைப்பும், பெயரும், புகழும் இருக்கின்றன. இதைவிட வேறென்ன வேண்டும்?

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES