மண்ணின் குரல்: ஏப்ரல் 2014: திருஎறும்பேஸ்வரர் கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.!

விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. 



கோயில் முன்புறம்

திரு.வி.கந்தசாமி அவர்களின் தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் எனும் நூல் இது ஆதித்த சோழன் காலத்தின் கற்றளியாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற குறிப்பைத்தருகின்றது. கல்வெட்டு ஆய்வுகள் இது முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் விரிவாக கட்டப்பட்டதாக குறிப்பிடுகின்றன. ஆக ஆதித்த காலன் காலத்தில் கோயில் கட்டப்பட்டு பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் விரிவாக வடிவம் பெற்றிருக்கலாம். கண்டராதித்த சோழன், சுந்தரசோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோர் புகழ் சொல்லும் கல்வெட்டுக்கள் ஆலயப் பிரகாரச் சுவற்றிலும்  அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளார்.

கற்பாறைகள் மேல் பிரமாண்டமாக நிற்கும் ஆலயம்! இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு நேர்த்தியான ஒரு கட்டுமானமா என காண்போரை வியக்க வைக்கும் கோயில் ஆர்க்கிட்கெக்சர்.

ஆலயத்தின் சுவாமி எறும்பேஸ்வரர். அம்மன், சௌந்தரநாயகி அம்மன். வில்வ மரம் இவ்வாலயத்தின் தல விருட்ஷம்.

அற்புத வடிவில் தெஷிணாமூர்த்தி
கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது என்னும் குறிப்பு  தமிழ் விக்கி பீடியாவில் காணப்படுகின்றது.

போர்காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ நிகழ்ந்த அழிவில் ஆலயத்தின் வசந்த மண்டபப் பகுதி மிகச் சிதைவுற்றுப் போனது. இந்த சிதைந்த பகுதிகளைச் சேர்த்து ஆலயத்தின் இடது புறத்தில் வசந்த மண்டபம் போன்ற ஒரு வடிவத்தை இந்திய தொல்லியல் துறை அமைத்திருக்கின்றது. 

ஆலயத்தினுள்ளே சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.  இது தேவார முதல்வர்களான நால்வர் சன்னிதிக்குப் பக்கத்தில் உள்ள வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இச்சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலின் முன்புற மண்டபத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் சன்னதி உள்ளது. இந்த சன்னதி அருகே சுமார் 3 அடி உயர கால பைரவர் சிலை இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு இந்த பைரவர் சிலை காணாமல் போனது. (தினமணி செய்தி) ஆலயச் சிற்பங்கள் கொள்ளயடிக்கப்படுவது பற்றி ஆங்காங்கே கேள்விப்படுகின்றோம். இக்கோயிலிலும் இது நிகழ்ந்திருக்கின்றது. உலகின் எந்த மூலையில் உள்ள அருங்காட்சியகத்தில் அல்லது தனியார் சேகரிப்பில் இந்த கால பைரவர் சிலை இருக்கின்றதோ தெரியவில்லை. 

தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களின் வரிசையில் இடம் பெறும் சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.


திருஎரும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை
மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!

இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!

கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!

நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்
நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/04/blog-post_9100.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=7cfjTStpZ3U

இப்பதிவு ஏறக்குறைய 13 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை பகிர்ந்து கொள்பவர் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


Martin Luther King Jr.

0 மறுமொழிகள்
Martin Luther King Jr - The speech notes presented by Mr KRA Narasiah in pdf form is available for readers Here.




நாடார் குல மித்திரன் - 1922 பெப்ரவரி மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


இந்த இதழின் உள்ளடக்கம்:
  • நாடார் மகாஜனங்களின் நிலமை
  • சென்னை சட்ட சபையில் கமுதி தண்டப் போலீஸ்வரி
  • செட்டாயிருந்தால் செல்வனாகலாம்
  • தற்காலப்போக்கும் நமது கடமையும்
  • ஆலயங்களும் நாடார்களும்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



THF Announcement: ebooks update: 21/4/2014 *மாநில திருமுறை மாநாடு - சிறப்பு மலர்*

2 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது.

நூல்: மாநில திருமுறை மாநாடு - சிறப்பு மலர்
தொண்டர் சீர் பரவுவார் ரா.ப. தங்கவேலனார் பவள விழா

தயாரிப்பு: திருமுறைக் கழகம், ஈரோடு
பதிப்பு: ரவிப்ரகாஷ் பிரிண்டர்ஸ்

நூல் குறிப்பு: மாநில திருமுறை மாநாடு திரு.ரா.ப.தங்கவேலனார் பவள விழா சிறப்பு மலர்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 378

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - கர்னல் காலின் மெக்கன்சி

2 மறுமொழிகள்

வணக்கம்.

அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக விழியப் பதிவு ஒன்றினை வெளியிடுகின்றோம்.

தமிழகம் மட்டுமன்றி இந்தியச் சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்னும் முயற்சியில் மிக ஈடுபாட்டுடன் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் காலின் மெக்கன்சி. இவரைப் பற்றியும் இவரது சேகரிப்புக்களைப் பாதுகாக்கும் நூலகங்களில் ஒன்றான சென்னையில் இருக்கும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றி கூறும் ஒரு விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.

காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். இந்தோனீசியாவில் பணிபுரிந்து பின்னர் இந்தியாவிற்கு  நில அளவையாளராக பணி புரிய வந்தவர். 

Inline image 1


இவரை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் ஆவணங்களைத் தேடியும் அவற்றை தொகுத்தும் வைத்தவர். தம் சொந்த பணத்தைச் செலவழித்து உதவியாளர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர் தொகுத்தசுவடிகளும் படியெடுத்த கல்வெட்டுக்களும் இந்திய வரலாற்றைச் சொல்லும் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன. 

மெக்கன்ஸி தொகுத்த ஆவணங்கள் மூன்று பகுதிகளாக சென்னையிலும், கல்கத்தாவிலும், லண்டன் நூலகத்திலும் உள்ளன.

2013 மார்ச் மாதம் எனது தமிழகப் பயணத்தின் போது நேராக அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்று நான் செய்த பதிவு இது. பேட்டியில் விளக்கமளிப்பவர் திரு.சந்திரமோகன், நூலக குரேட்டர்.

காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக் துணைவேந்தர்) தனது நூலில் இப்படிக் கூறுகின்றார்.

18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.

விழியப் பதிவைக் காணும் முன் சென்னையில் இருக்கும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தெரிந்து கொள்வது இந்த விழியப் பதிவைப் புரிந்து கொள்ள மிக உதவும் என்பதால் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றிய விளக்கக் குறிப்பை இந்த வெளியீட்டில் இணைக்கின்றோம். தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் இக்குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. நூலகத்தின்  கையேடான இக்குறிப்புக்களை நமக்காகத் தட்டச்சு செய்து உதவியவர் திரு.இன்னம்பூரான். அவருக்கு நம் நன்றி.


Inline image 1
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்



GOVERNMENT
ORIENTAL MANUSCRIPTS LIBRARY
MADRAS-5

ORIGIN
The collections of Colonel Colin Mackenzie (1754-1821), Dr.Leyden and Mr.C.P.Brown constitute the nucleus of the vast collection of manuscripts preserved in the Government Oriental Library, Madras, which consists of manuscripts of works in literature, history, philosophy and science, written in South Indian and Oriental languages, and of Kaifiyats and inscriptions, found in many places belonging to different periods.

MACKENZIE’S COLLECTION
Colonel Colin Mackenzie who came to India in 1783 as a Cadet of Engineers on the Madras Establishment of the East India Company took a keen interest in the study of ancient mathematics and, of the Logatithm in particular, and in Oriental languages.  He collected a large number of manuscripts, coins, inscriptions,maps etc., bearing on literature, religion, history, manners and customs of the people not only from different parts of India but also from Ceylon and Java.

On his appointment as the Surveyor - General of India in 1818, Colonel Mackenzie took his valuable collections with him to Calcutta and went on adding to them till his death in 1821.

This collection was bought from Mrs. Mackenzie for 10,000 pounds by the East India Company in 1821 and divided into three parts.  While one part was retained in London, the other parts were sent to Calcutta and Madras.

LEYDEN’S COLLECTIONS

In the India Office Library, London, a collection of manuscripts in Tamil, Telegu and Kannada characters belonging to Dr. Leyden ( a remarkable linguist and traveller who was in India from 1803 to 1811) was noticed by Mr. C.P.Brown in 1837.  The valuable collection of Dr.Leyden which was purchased by the East India Company after his death and lodged at the India House, London was subsequently brought to India, thanks to the efforts of Mr. C.P.Brown who had joined the Indian Civil Service.

BROWN’S COLLECTION

Mr. C.P.Brown (1798 -1184) presented to the East India Company his own valuable collections of paper manuscripts of Sanskrit and Telegu works. This collection was brought to India in 1855.

GROWTH

Full-fledged library in the true sense was started in 1869.  Three collections i.e, the Mackenzie Collection, the East India House Collection and Brown Collection were transferred to the Presidency College, Madras in 1870 and Mr. Pickford who was Professor of Sanskrit in Presidency College, was directed to prepare a Catalogue for them.

He was then called upon to prepare a scheme for publication of important literary and historical manuscripts.  In 1876 he was requested to discover new manuscripts and to purchase them or aquire them by transcription.

Accordingly, many manuscripts have been acquired from time to time and added to the Library collection.

STOCK

From such small beginnings, the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS has grown to its present dimensions and it possesses 71180 manuscripts in the following languages:-

Tamil16398
Sanskrit48884
Telegu2150
Kannada250
Marathi956
Urdu184
Arabic497
Other Oriental Languages407
Local Records1454
 Total71180


Consequent on the formation of linguistic States in our country about 7,000 manuscripts in Telegu, Kannada and Malayalam were transferred to Andhra Pradesh, Karnataka and Kerala respectively.  Apart from this 22,887 printed books are available for reference in the Library.

FUNCTIONS

The main functions of the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, are as follows:-

  • Acquisition and preservation of manuscripts.
  • Classification and Cataloging of manuscripts.
  • Publication of rare manuscripts. and Library Catalogs.
  • Purchase of books and periodicals for reference, and
  • Supply of of information of manuscripts to the scholars.

PRESERVATION

The rare and valuable palm-leaf manuscripts are carefully preserved by adopting manual and chemical methods.  The injured and damaged paper manuscripts. are preserved by being mended with Chiffon cloth.

PUBLICATION

The GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY has brought out so far 350 publications including Descriptive and Triennail Catalogues of its manuscripts in various languages.  The publications have been brought under two series. GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES and GOVERNMENT ORIENTAL SERIES, those in the latter being edited by the Curator and the staff of the Library.

BULLETIN

Multilingual Bulletin published annually by the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY contains in print rare and unpublished manuscripts in various  languages.  Twenty one volumes have been published so far.

PARTICIPATION IN EXHIBITION

The rare and valuable manuscripts of the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY have been displayed in the manuscript exhibitions on the following occasions:-
  • The Twenty Sixth International Congress of Orientalists at new Delhi in 1964.
  • The third All India Agama Silpa Bharatha Folklore Conference at Kanchipuram in  1964.
  • The world Telegu Conference at Hyderabad in 1965.
  • The Second World Tamil Conference at Madras in 1968.
  • The Lord Mahaveera’s 25th Parinirvana Centenary Celebratrations at Madras in 1974.
  • The Silver Jubilee Celebrations of the Sanskrit Department Vivekananda College at Madras in 1980.
  • The Chitirai Festival at Madurai in 1980.
  • The Fifth World Tamil Conference at madurai in 1981 and 
  • Seminar on Sanskrit Literature at Vivekananda College, Madras in 1982.


ADMINISTRATION

The GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY is a govenment institution headed by the Curator under the control of the Director of Archaelogy, Government of Tamil Nadu. 

SERVICE

Manuscripts and books are issued to visitors for study or consultation on request.  Permission is accorded for studying, copying and comparing the manuscripts.

LOCATION

THE GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY is located in the Western Wing of the first floor of the Madras University Library.  It is kept open fro 10-00 A.M. to 5-45 P.M. on all working days and shall remain closed on Fridays and Saturdays and the government holidays’.


அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

சென்னை - 600 005

தோற்றம்

இந்தியாவின் முதல் சர்வேயர் செனரல் ஆன ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி (1754-1821), முனைவர் லேடன், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயரான திரு. சி.பி.பிரெளன் (1798-1884) ஆகியோர் தொகுத்து வைத்த ஓலை மற்றும் நாட்சுவடிகளே அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு காரணமாகும்.  இவர்கள் தொகுத்த சுவடிகளில் இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், கைபீதுகள் எனப்படும் வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் முதலிய பொருட்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு பாரசீகம் முதலிய மொழிகளில் உள்ளன.  இச்சுவடிகள் தற்போதைய ஆந்திர மாநிலம், மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை கொண்டுள்ளன.

மெக்கன்சியின் தொகுப்பு

காலின் மெக்கன்சி என்பவர் கி.பி. 1783 - இல் இந்தியாவிற்கு வருகை தந்தார்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பொறியியல் பிரிவின் பணியாளராக இவர் இங்கு பணியாற்றினார்.  பழங்கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார்.  அவர் ஏராளமான சுவடிகள், வரை படங்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.  தமிழ் நாடு தொடர்பானது மட்டுமல்லாமது சிலோன், சாவா ஆகிய பகுதிகள் தொடர்பாகவும்  அவருடைய தொகுப்புகள் இருந்தன.

கி.பி. 1818 - இல் காலின் மெக்கன்சி, சர்வேயர் செனரலாக பதவி உயர்வு பெற்றார்.  இவர் தமது தொகுப்புகளைக் கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார்.  அங்கு மேலும் பல சுவடிகளை, தாம் மறையும் வரை சேகரித்தார்.

இவருடைய மொத்தத் தொகுப்புகளையும் 10,000 பவுண்டுகளுக்கு கிழக்கிந்திய கம்பெனியார் விலைக்கு வாங்கினர்.  மெக்கன்சியின் தொகுப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை சென்னைக்கும், இன்னொரு பகுதியை கல்கத்தாவிற்கும், மூன்றாவது பகுதியை இலண்டனிற்கும் அனுப்பினர்.

லேடனின் தொகுப்பு

பேராசிரியர் லேடன் என்பவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த (1803 -1811) மொழியியல் அறிஞர் ஆவார்.  இவருடைய தொகுப்பு இலண்டனில் உள்ள இந்தியா அலுவலகத்தில் இருந்ததை, சி.பி. பிரெளன் கி.பி. 1937-இல் கண்ணுற்றார்.  லேடனில் அத்தொகுப்பில் , தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிச்சுவடிகள் இருந்தன.  அவற்றை சி.பி. பிரெளனின் முயற்சி காரணமாக கிழக்கிந்திய கம்பெனி, லேடனின் மறைவுக்குப் பிறகு, விலைக்கு வாங்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.

பிரெளனின் தொகுப்பு

சி.பி.பிரெளன் என்பவர் ஆந்திர மாநிலத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவராகவும், சென்னை பல்கலைக் கழக மன்றச் செயலாளராகவும் (1843), சென்னை கல்லூரி நூலகக் காப்பாட்சியாரகவும் (1848) இருந்தார். இவர் தொகுத்த தெலுங்கு, தமிழ் மற்றும் வடமொழிச்சுவடிகளை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கி, 1855-இல் இந்தியாவிற்கு அளித்தது.

வளர்ச்சி

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் முழுக்கட்டமைப்பில் கி.பி. 1869 -இல் தொடங்கப்பட்டது.  மெக்கன்சியின் தொகுப்பு, கிழக்கிந்தியக் கம்பெனியின் தொகுப்பு, பிரெளன் தொகுப்பு ஆகிய மூன்று தொகுப்புக்களும் 1870-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரே தொகுப்பாக வைக்கப்பட்டது. அப்போது மாநிலக்கல்லூரியில் வடமொழி பேராசிரியராக  இருந்த பிக்போர்டு என்பவர் அச்சுவடிகளுக்கு விரிவட்டவணை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இன்றியமையாத இலக்கிய, வரலாற்றுச் சுவடிகளை அச்சிடுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.  1876-இல் மேலும் பல புதிய சுவடிகளைச் சேகரிக்குமாறும், படியெடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.  அதற்கிணங்கப் பல்வேறு சுவடிகள் காலந்தோறும் சேகரிக்கப்பட்டன. 

இருப்பு:

மேற்கொண்டவாறு தோற்றம் கண்ட அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகமானது தற்பொழுது மிகச் சிறந்த முறையில் வளர்ந்து, கீழ்வருமாறு மொத்தம் 72314 சுவடிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

___________________________________________________________________
மொழி ஓலை தாள்  மொத்தம்
___________________________________________________________________

தமிழ் 10783 5775 16558

வடமொழி 38282 11473 49755

தெலுங்கு 806 1426 2232

கன்னடம் 182 72 254

மராத்தி _ 967 967

உருது _ 184 184

அரபு _ 407 407

பாரசீகம் _ 1396 1396

ஒரிய, பாலி,  127 _ 127

சிங்களம், பர்மியம்

வட்டார ஆவணங்கள்  -         434 434
________________________________________________________________
மொத்த சுவடிகள்  50180 22134 72314
________________________________________________________________

மேற்படி சுவடிகள் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிச்சுவடிகள் மொத்தம் 7,000, மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன:
தற்பொழுது இந்நூலகத்திலுள்ள அச்சு நூற்கள் மொத்தம்  25372 கீழ் வருமாறு அமைந்துள்ளன.

தமிழ் 5442
வடமொழி 7320
தெலுங்கு 1575
கன்னடம்  70
                மராத்தி 137
மலையாளம் 444
அரபு 230
பாரசீகம் 265
உருது 705
ஆங்கிலம்          6926
பிரெஞ்சு, செர்மனி மற்றும்
ஐரோப்பிய மொழிகள் 194
இந்தி 130
விவர அட்டவணை 805
அகராதிகள் 182
வங்காளம்  18
_____
25373
_____

செயல்பாடுகள்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தலையாய பணிகள் கீழ்வருமாறு :

1. சுவடி சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்
2. சுவடிகளை வகைப்படுத்தலும் அட்டவணைப்படுத்தலும்
3. அரிய சுவடிப் பதிப்பும், அட்டவணைப்பதிப்பும்
4. பருவ இதழை ஆண்டுதோறும் வெளியிடுதல்
5. அச்சு நூற்கள் மற்றும் பருவ இதழ்களை சேகரித்தல்
6. கல்வியாளர்களுக்குச் சுவடி விவரங்களை அளித்தல்

பாதுகாப்பு

நூலகத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்சுவடிகள் தூசி அகற்றியும், இரசாயனப் பொருட்கள் இட்டும், குளிர் சாதனம் செய்யப்பட்டுள்ள பெரியதொரு அறையில் பாதுகாக்கப்படுகின்றன.  இருப்பறையில் 1997 -இல் குளிர் சாதன வசதி செய்யப்பட்டது.

 சிதிலமான நாட்சுவடிகள் மற்றும் அச்சு நூற்கள் சிப்பான் துணி ஒட்டிச் செப்பனிடப்படுகின்றன.

வெளியீடுகள்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் மொத்தம் இது வரை வெளி வந்துள்ள 419 வெளியிடுகள் கீழ்வருமாறு :

___________________________________________________________________
மொழி வெளியீடுகளின்   அட்டவணைகளின்       மொத்தம்
                        எண்ணிக்கை        எண்ணிக்கை
___________________________________________________________________

தமிழ் 81 40 121

வடமொழி 55 52 107

தெலுங்கு 30 28 58
கன்னடம் 22 10 32

மலையாளம் 29  5 34

மராத்தி  2 4  6

இசுலாமிய
மொழிகள் 19 11 30

பல்வகை _  7  7

பருவ இதழ் 24 _ 24

________________________________________________________________
மொத்தம் 262 157 419
________________________________________________________________


பருவ இதழ்

தமிழ், தெலுங்கு, வடமொழி, உருது, ஆகிய மொழிகளில் பதிக்கப்பெறும் சில நூற்களைத் தாங்கி ஆண்டு தோறும் ஒரு பருவ இதழ் வெளி வருகிறது.  அது வரை மொத்தம் 24 தொகுதிகள் வெளி வந்துள்ளன.  24 -ஆம் தொகுதி 1999 -ஆம் ஆண்டு வெளிவந்தது.

பொறுப்பாளர்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் காப்பாட்சியரின் கீழ் இயங்கி வரும் ஓர் அரசு நிறுவனமாகும்.  இந்நூலகம் தற்பொழுது தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்துள்ளது.

தொண்டு

சுவடிகள் மற்றும் அரிய அச்சு நூற்கள் கல்வியாளர் அனைவருக்கும் கட்டணம் எதுவுமின்றி நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வழங்கப்படுகின்றன.  ஆய்வு மாணவர்களுக்கும், அச்சிட்டு வெளியிடுவோர்களுக்கும் சுவடிகளை படியெடுத்துக்கொள்ளவும், ஒளியச்சுப்படி வழங்கவும் நிலைமைக்கு ஏற்றவாறு அனுமதி வழங்கப்படுகிறது.  நூலகத்தின் ஒளியச்சுக்கருவி 1997-இல் வாங்கப்பட்டது.  நூலகத்தின் வெளியீடுகள் அனைத்தும் 25 விழுக்காடு கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இருப்பிடம்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்னை பல்கலக்கழக நூலகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ளது.

அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வெள்ளி, சனி ஆகிய வார விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஏனைய எல்லா நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5. 45  வரை இந்நூலகம் செயல் படுகிறது.



12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம். சில உதாரணங்கள் புகைப்படங்களாக.

Inline image 2
சிவலிங்க வடிவத்திலான ஓலைச்சுவடி கட்டு - மெக்கன்சி சேகரிப்பு


Inline image 3
குருந்தகடு வடிவில் ஓலைச்சுவடிக்கட்டு


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/04/blog-post_12.html

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI

விழியப் பதிவு, புகைப்படங்கள், செய்தி தொகுப்பு: சுபாஷிணி.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​


THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி*

3 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது.

சுவடி நூல்: திருக்குறள்
இயற்றியவர்: திருவள்ளுவர்


Inline image 1
அகரமுதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் - முதல் ஓலை

தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த​ச்​ சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர்கள் சென்னையைச் சார்ந்த மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராமசாமி பிள்ளை.  இதனை 2010ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர்களின் மையத்திற்கு சென்றிருந்த போது வழங்கினார்கள்.

சுவடி மின்னாக்கம்:மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் (Ragavendra Siddha medical Center), தொண்டியார்பேட்டை, சென்னை, தமிழகம்.
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 377

​குறிப்பு: சுவடி நூலில் ​266 ஓலைகளில் திருக்குறள் செய்யுள்கள் அமைந்துள்ளன.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 6/4/2014 *திருநாகைக்காரோணப்புராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

அந்த வகையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களின் சிறந்த படைப்பாகக் கருதப்படும் திருநாகைக்காரோணப்புராணம் எனும் இன்னூலை இன்று அவரது பிறந்த தினத்தில் வெளியிடுவதில் பெறுமை கொள்கின்றோம்.

நூல்: திருநாகைக்காரோணப்புராணம்
ஆசிரியர்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்கள்

பதிப்பு: ஏஷியாடிக் அச்சுக்கூடம்
நூல் குறிப்பு: பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவராகிய திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால் பார்வையிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது இன்னூல். ஏறக்குறைய 300 பக்கங்கள் கொண்ட நூல் இது.

ஒவ்வொரு பக்கங்களும் உடைந்த நிலையில் இருந்தமையால் மிகக் கவனாமாக திருமடத்திலேயே கேமராவில் பதியப்பட்டு மின்னாக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 376

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


​மண்ணின் குரல்: ஏப்ரல் 2014: மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

0 மறுமொழிகள்
​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
நமது மின்னூல் வெளியீடுகளில் இதுவரை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நூல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பதை மின்தமிழ் வாசகர்கள் அறிவீர்கள்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் புலவராக இருந்தவர். இங்கு அவர் பல மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தும் அங்கிருந்தபடியும் மற்றும் பல ஊர்களுக்கு பயணித்த படியுமிருந்து பல தல புராண நூல்களை இயற்றினார். அவர் மறைந்ததும் இதே ஆதீனத்தில் அவருக்காக வழங்கப்பட்டிருந்த  திருமடத்து புலவர்கள் இல்லத்திலேயே!


Inline image 2
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்


மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திரு.சிதம்பரம்பிள்ளை அன்னத்தாச்சி அம்மையார் ஆகியோருக்கு 6.4.1815ம் ஆண்டு பிறந்தார். தமது தந்தையார் ஒரு தமிழ் ஆசிரியர் என்பதால் அவர் துணையோடு கல்வி கற்க ஆரம்பித்தார். அவரது தமிழ் ஆர்வம் எல்லையற்றதாக இருந்தமையால் இவர் சான்றோர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களிடமெல்லாம் கல்வி கற்று வரலானார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகுந்த தமிழ்ப்புலமை கொண்டவர் என்பதை அறிந்து தக்கார் துணை கொண்டு திருமடத்தில் ஆதீனகர்த்தரின் அறிமுகம் பெற்றார். தமக்கு ஆசிரியராக இருந்த ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகருக்காக திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ், கலம்பகம் ஆகிய இரு நூற்களை பிள்ளையவர்கள் இயற்றினாரர்கள். இவை இரண்டும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  சேகரத்தில் உள்ளன. 

பிள்ளையவர்களின் தமிழ் புலமையைக் கண்டு பாராட்டி ஆதீனகர்த்தர் இவருக்கு மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டமளித்துச் சிறப்பித்தார்கள். இவருக்குப் பல மாணவர்கள். அதில் குறிப்பாக, சவேரிநாதப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் ஆகியோரைக் கூறலாம். சீர்காழியில் நீதிபதியாகப் பதவி வகித்த வேதநாயகம் பிள்ளையவர்கள் இவரது நெருங்கிய நண்பராக இருந்தவர். அம்பலவாண தேசிகர் மறைவுக்குப் பின் ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்கு ஆதீனத்தில் பல சலுகைகளை உருவாக்கித் தந்து பிள்ளையவர்களோடு அவரது அன்பிற்குரிய மாணாக்கர்கள் அனைவரும் தங்கியிருந்து பாடங் கேட்கவும் உதவியவர். ஆதீனகர்த்தர் என்ற நிலையைக் கடந்து இவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பும் அமைந்திருந்தது. இவர் 1.2.1876ம் ஆண்டில் இறைவன் திருவடியை அடைந்தார் என்பன போன்ற தகவல்களை உ.வே.சாவின் என் சரிதக் குறிப்புக்களிலிருந்து அறியமுடிகின்றது.

19ம் நூற்றாண்டில் தமிழில் அதிகமான நூற்களை இயற்றிய தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே. புராணங்களும் சிறுவகை நூல்களுமாக ஏறத்தாழ எழுபத்தொன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் இயற்றியுள்ளார். அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்தவை.

இவர் இயற்றிய நூல்கள் வகைகளின் அடிப்படையில்:
  • புராணம்: 9
  • கோவை: 3
  • பிள்ளைத் தமிழ்: 7
  • அந்தாதி: 14
  • மாலை: 6
  • பதிகம்: 3
  • கலம்பகம்: 2
  • உலா: 1
  • அகவல்: 1
  • தூது: 1
  • சரித்திரம்: 2
  • தனிப்பாடல்கள்: 1
  • விருத்தம்: 1
  • கதை: 1
  • ஆனந்தக் களிப்பு: 1

குறிப்புக்கள்: திருச்சிராப்பள்ளித் தமிழ் சங்கத்தின் வெளியீடு திரிசிரிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாறு.


Inline image 1
மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் உருவத்தோற்றத்தை மனதில் வைத்து திருவாவடுதுறை ஆதீனத்தில் உருவாக்கிய  புகைப்படம் இது.  இப்புகைப்படம் ஆதீனத்தின் சரசுவதி மகாலில் பதியப் பட்டது.


இன்று மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். 
அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ
​​
னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சிறிய விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவு 13 நிமிடங்கள் 

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது அங்கு பதிவு செய்யப்பட்ட விழியம் இது. 

விழியப் பதிவைக் காண:

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES