வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 2

0 மறுமொழிகள்

நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார்.  பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.

​பதிவினைக் கேட்க செல்க !

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணி

1 மறுமொழிகள்
வணக்கம்.

11.02.2017 சனிக்கிழமை வட  அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் - ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று வெளியிடப்படுகின்றது.
சொற்பொழிவாளர். முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.

விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2017/02/blog-post_26.html


நன்றி. இப்பதிவை நமக்காக செய்து வழங்கிய திரு.அருண்குமார் (Frisco, Texas) அவர்களுக்கும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்கள் திரு.வேலு திருமதி விசாலாட்சி ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 1

0 மறுமொழிகள்
நெல்லைச் சீமையின் வட்டார வழக்கு தமிழகத்தின் ஏனைய பிற பகுதிகளிலிருந்து வேறுபடுவது.
பல சொற்களை உள்ளூர் வாசிகளே கூட மறந்து விடும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கும் வேளையில் இந்த நிலத்திற்கே உரிய சிறப்பாம் இச்சொற்களை நாம் பதிந்து வைத்து அவற்றை கேட்டு மகிழ்வதும் சுவாரசியம் தானே?


அதிலும் நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் சுவைபட பேசுகின்றார். 10 நிமிட பதிவு முதல் பகுதியாக இன்று வெளியிடப்படுகின்றது.


நெல்லைத் தமிழ் கேட்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: பறையிசை நடனம்

0 மறுமொழிகள்
வணக்கம்.



பறையிசை நடனம் பண்டைய தமிழர் மரபு சார்ந்த கலைகளில் ஒன்று. இவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற  தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் வழங்கிய பறையிசை நடனம் இது. 

மிக நேர்த்தியாக பறையிசைக்கருவியை வாசித்துக் கொண்டு இளைஞர்கள் நடனம் ஆடுவது பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2017/02/blog-post_77.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=Td5pQebYPFY&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் த.ம.அ கருத்தரங்கம் - 22.12.2016

0 மறுமொழிகள்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 22.12.2016 அன்று ஒரு நாள் கருத்தரங்கத்தினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தக் கருத்தரங்கு ஆவணப்படுத்துதலின் அவசியம் ,மற்றும் அதன் தொழில்நுட்ப முறைகள், சவால்கள் ஆகியன பற்றி அலசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல கல்லூரிகளிலிருந்து ஆய்வு மாணவர்கள் திரளாக இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை முழு மூச்சுடன் ஏற்பாடு செய்த இக்கல்லூரியின் நூலகர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களும் கல்லூரி முதல்வரும் பாராட்டுதலுக்குறிவயவர்கள்.

அத்தோடு இந்த நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர் கருணாகரன் அவர்கள், மாணவர்களுடன் ஆசிரியர்களுடனும் மிகுந்த அன்புடனும்  ஈடுபாட்டுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு எனது உரையினையும் முழுமையாக கேட்டு கேள்வி பதில் அங்கத்திலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டமை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

இத்தகைய நிகழ்வுகள் உடனடி தீர்வுகளுக்கும் வித்திடுகின்றன என்பதை மாணவர்களது தொடர்ந்த கருத்துப் பதிவுகளின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

இக்கருத்தரங்கு பற்றி பத்திரிக்கைகளும் செய்திகள் வெளியிட்டு உதவின.

சில புகைப்படங்களும் செய்திகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

சுபா





















மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: மதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி - தொடக்கவிழா மற்றும் கண்காட்சி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

16.12.2016 வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு நாள் கல்வெட்டு அறிமுகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை திட்டமிட, இந்த நிகழ்ச்சியை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது  மதுரை அமெரிக்கன் கல்லூரி. அந்த நாளில் இக்கல்லூரியில் உள்ள அரிய ஆவணங்கள், சேகரிப்புக்கள் ஆகியனவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இந்த நிகழ்வின் தொடக்கவிழா உரைகளை இன்று வெளியிடுகின்றோம்.  வரவேற்புரைக்குப் பிறகு நோக்க உரையும், வரவேற்புரையும் அதன் தொடர்ச்சியாக கண்காட்சி திறந்து வைத்துப் பொது மக்கள் பார்வையிடுதலும் இப்பதிவில் அடங்குகின்றன.

  • 1:12 நிமிடம் - கல்லூரி முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டபர் -  தொடக்க உரை
  • 11:54 நிமிடம் - முனைவர்.சுபாஷிணி - நோக்க உரை
  • 26:41 நிமிடம் - முனைவர்.மோனிக்கா - வரவேற்புரை
  • 35:10 நிமிடம் - கண்காட்சி திறப்பு விழா, முனைவர்.பாண்டியராஜா திறந்து வைக்கும் காட்சியும் கண்காட்சியும்

விழியப் பதிவைக் காண:    http://video-thf.blogspot.de/2017/02/blog-post.html   
யூடியூபில் காண:        https://www.youtube.com/watch?v=AxAW0BpN-nU&feature=youtu.be

நன்றி. இக்கருத்தரங்கை  ஏற்பாடு செய்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த கல்லூரி நூலகர் முனைவர்.வசந்தகுமார் அவர்களுக்கும் நண்பர் செல்வம் ராமசாமி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES