THF Announcement: E-books update: 28/06/2015 *ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு (ஸ்ரீ பரத்வாஜ ஆச்ரம மஹிமை)
நூல் ஆசிரியர்: பிரும்மாண்ட புராணத்திலிருந்து தொகுக்கப்பட்டு முடிகொண்டான் பண்டின் எம்.எம். நாரயணஸ்வாமி ஐயர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
பதிப்பு: சீர்காழி ஸ்ரீ அம்பால் பிரஸ்

நூல் குறிப்பு: 
வடமொழி ஸ்லோகங்களும் தமிழ் மொழி பெயர்ப்புக்களும் கொண்ட நூல்.
இந்த ஆலயம் மாயவரம் காரைக்குடி ரயில் பகுதியில் உள்ளது என்ற குறிப்பு நூலில் உள்ளது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 428

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 27/06/2015 *பழநித்தல வரலாறு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:பழநித்தல வரலாறு
நூல் ஆசிரியர்: M.S.A.Salam

நூல் குறிப்பு: 
தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.
கோயில் அமைப்பு, பழனி மலை வரலாறு, சிவகிரி, சத்திரகிரி ஆகிய மலைகல் பழனிக்கு வந்த வரலாறு என்று இந்த நூல் சில புராணக்கதைகளை விளக்குவதாக உள்ளது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 427

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 22/06/2015 *சிதம்பர மஹாத்மியம்*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:சிதம்பர மஹாத்மியம் (வடமொழிக்கு நேர் மொழி பெயர்ப்பு)
நூல் ஆசிரியர்: சிதம்பரம் C.S. ஸச்சிதானந்த தீஷிதர்

பதிப்பகம்: கிராஸ்வேடு பிரஸ், சிதம்பரம்

வெளிவந்த ஆண்டு: 1952


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 426

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 21/06/2015 *தண்டலையார் சதகம்*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  தண்டலையார் சதகம்
படிக்காசு தம்பிரான் அருளிய பழமொழி விளக்கம் குறிப்புரையுடன் 
வெளியீடு: தருமையாதீனம்

நூலைப் பற்றி..
இது ஒரு அறவுரை நூல். இதன் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழியை அமைத்து அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூலுக்கு பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

செய்யுள் நடையென்றாலும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான விசயங்களைப் பொருளாக்கி அமைத்திருக்கின்றார் தம்பிரான். 

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 425

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி 
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​



மண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சக்கரேஸ்வரி

திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம்.

சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டு முறைகளும் நெடுங்காலமாகவே இருந்து வருகின்றது.  அதன் தொடர்ச்சியாகவே தற்போது இங்கு கட்டப்பட்டுள்ள ஆலயமானது ஐந்து தேவதைகளுக்காக அமைந்துள்ளது. 

இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. இவர்கள் சாசன தேவதைகள். அதாவது சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள்!

இந்த ஆலயத்தின் பஞ்சகுல தேவதைகளின் அமைப்பு ஐங்கோண வடிவில் உள்ளது.

1.சக்கரேஸ்வரி - இவர் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இயக்கி. இவரது வாகனம் கருடன். இவர் சத்தியத்தைக் கடைபிடிக்க துணையாக நிற்பவராக உருவகப்படுத்தப்படும் இயக்கி. 

2.ஜ்வாலாமாலினி -  இவர் 8வது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபரின் இயக்கி. இவரது வாகனம் எருமை. மானுடர்களைத் துன்பம் நேராமல் காக்கும் இயக்கி இவர்.

3. கூஷ்மாண்டி - 28வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார்.

4.பத்மாவதி - இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார்.

5. வராகி - வினைகளின் வேர்களை அருக்கும் தேவதை இவர்.  இவரது வாகனம் சிம்மம். 

இந்த ஜினாலயத்தில் உள்ள இந்த 5 சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஏழு அடி உயரம் கொண்டவை.

இந்த ஐந்து சிற்பங்களோடு இக்கோயிலில் தனியாக ஒரு பகுதியில் சரஸ்வதிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.

10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/06/blog-post_21.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=Z6AamUukUbA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 20/06/2015 *வேதாரணிய தலப்புராண வசனம்*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:வேதாரணிய தலப்புராண வசனம்
நூல் ஆசிரியர்:  கந்தசாமி ஐயர் 
(இவர் தேத்தாகுடி முதல்தர ஆரம்பபாடசாலை கருத்தரும் கவிச்சக்ரவர்த்தியுமான பிரம்மஸ்ரீ இராம வயித்தியநாதசர்மா அவர்கள் மாணாக்கனும் தேத்தாகுடி வீரசைவ பரம்பரை சரவணையர் அவர்கள் குமாரனுமாவார் என நூலின் அட்டையில் குறிப்பு உள்ளது.
வெளியிடுவோர்: மட்ராஸ் சக்கரவர்த்தி பிரஸ்

வெளிவந்த ஆண்டு: 1934


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 424

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 14/06/2015 *பண்டிதரின் கொடை*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு  தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  பண்டிதரின் கொடை - விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கை
ஆசிரியர்: கௌதம சன்னா
ஆண்டு: 2007
பதிப்பு: சென்னை சங்கம் வெளியீடு
(ஆசிரியரின்  சம்மதத்துடன் இந்த நூல் த.ம.அ மின்னூல் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது)



நூலைப் பற்றி..
  1. இந்த நூலில் ஒன்பது பகுதிகள் இருக்கின்றன. அவை:
  2. சாதி இந்துவின் நன்றி
  3. இடஒதுக்கீட்டின் தொடக்கம்
  4. தொடங்கியகதிப்போக்கில்..
  5. முன் முயற்சிகளும்.. முதற்கட்ட முன்வைப்புக்களும்..
  6. இந்து - முஸ்லீம் ஒற்றுமை எனும்..
  7. இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கை முகிழ்ந்தது
  8. இடைவெளி
  9. அனைத்து சமூக நீதியின் முகங்கள்
  10. மீளும் மணிமுடி

நூலிலிருந்து..
இந்திய துணைகண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும், இடஒதுக்கீடு கொள்கை என்றும், சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படையையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில் அதை கொடை என சொல்லாமல் எப்படி சொல்வது. ஆனால் அப்படி ஒரு வரலாற்றுக் கட்டமே நடக்கவில்லை என்பது போட்ல இந்திய இடஒதுக்கீடு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக பண்டிதரின் கொடை இருக்கும்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 423

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: நூலின் ஆசிரியர் கௌதம சன்னா. அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.



அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


மண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது.   இன்று  தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்த மேல்சித்தாமூர் சமண மடத்திற்கு  அடுத்ததாக ஆனால் மிகப் புகழ்பெற்ற சமணத்தலமாக விளங்குவது திருமலை. 

இங்கிருக்கும் ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தில் குழந்தைகள் ஆசிரம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். மடத்தின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றது. இதில் ஏறக்குறைய 1000 மாணாக்கர்கள் பயில்கின்றனர்.  இப்பள்ளி ஸ்ரீ நேமினாதர் மேல்நிலைப் பள்ளி என வழங்கப்படுகின்றது. 

முதியோர் காப்பகம் ஒன்றினையும் இந்த சமண மடம் நடத்தி வருகின்றது என்பதோடு வேற்று சமயத்தோராக இருந்தாலும் இங்கே அவர்களுக்கும் இடம் அளிக்கப்படுகின்றது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சம். இவர்கள் திருநீறு, திருமண் ஆகிய பிற சமய புர அடையாளக்குறிகளை அணிவதையும் இம்மடம் தடை செய்யவில்லை. 

இதனைத் தவிர  இயலாதோருக்கு இலவச மருத்துவ உதவி, யாத்திரிகர் விடுதி, சாதுக்கள் தங்குமிடம், கோ சாலை ( பசுக்கள் காப்பகம்), நூலகம், நேமிநாதர் நூற்பதிப்பகம் ஆகியனவற்றோடு ஆரம்பப்பள்ளியும் மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்றது.

அத்தோடு அருகாமையில் இருக்கும் நிலத்தில் இயற்கை விவசாயமும் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது. 

மடாதிபதி யே இங்கு இம்மடத்தில் திருமணங்களை செய்து வைக்கின்றார். மடம் மக்கள் வந்து செல்லும் இடமாக எப்போதும் பொது மக்கள் நிறைந்திருக்கும் இடமாகவே இருக்கின்றது. 

மடத்தின் வாசலில் எதிர்புறத்தில் பஞ்சகுல தேவைதைகள் ஆலயம் ஒன்றையும் இத்திருமடம் அமைத்திருக்கின்றது. பிரமாண்ட வடிவத்தில் ஐந்து தேவதைகளும் இங்கே வீற்றிருக்கின்றனர்.

இந்தப் பிரத்தியேகப் பேட்டியில்:

  • சமணம் என்பது  ஒரு சமயமல்ல, அது ஒரு மார்க்கம்
  • அகிம்சா கொள்கை
  • சமணம் எனும் தர்மம்
  • ஏன் சமணம் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு பரவவில்லை?
  • மகாவீரர் தத்துவம் என்பது என்ன?
  • தீர்த்தங்கரர்கள்
  • சமண வழியில் இருக்கும்  பிரிவுகள்.. அதன் வித்தியாசங்கள்
  • புத்தர் சமணரா?
  • பக்தி காலத்தில் சைவ வைணவ எழுச்சியின் போது சமணம் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமணம் தொடர்ந்து நிலைத்து இருக்கின்றது
  • இக்கால நிலை
  • சமணத்தில் சோதிடம் எவ்வாறு காணபப்டுகின்றது
  • இந்த மடம் உருவாக்கபப்ட்ட வரலாறு..

என பல தகவல்களை அடிகளார் வழங்குகின்றார்.



பிறப்பும் இறப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது கர்ம விணைகளை நீக்கி பரமாத்மா அம்சத்தை ஒவ்வொரு சீவனும் சென்று சேரலாம். சாதி பேதம் என்பதோ சிறியவர் பெரியவர் என்ற பேதமோ தேவையற்றவை.பரமாத்மா அம்சத்தை பெற இவை தடையல்ல என்ற கருத்தோடு இப்பேட்டி நிறைவடைகின்றது
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.

50  நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/06/blog-post_13.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=zjIWJd_uYLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 12/06/2015 *திருஇரும்பைமாகாளத் திருப்பதிகம்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  திருஇரும்பைமாகாளத் திருப்பதிகம்
வெளியிடுவோர்: தருமை ஆதீனம்

நூலைப் பற்றி..
திரு இரும்பைமாகாளம் என்ற தலம் திருஞானசம்பந்தர் எழுந்தருளிய தலங்களில் ஒன்று. பாண்டிச்சேரியை அடுத்துள்ள இத்தலம் தொண்டைநாட்டுத் தலங்களில் இறுதியானதாக் எண்ணப்பெறுகின்றது,
சிறு நூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 421

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 13/06/2015 *திருமயிலைத் தலபுராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  திருமயிலைத் தலபுராணம்
வெளியிடுவோர்: சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ பகாலீசுவரர் தேவஸ்தான வெளியீடு

வெளிவந்த ஆண்டு: 1948


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 422

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 7/06/2015 *வேளாளர் சரித்திரம்

5 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  வேளாளர் சரித்திரம் 2ம் பதிப்பு. *ஏறக்குறைய 1927ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கலாம்


நூலைப் பற்றி..
முதல் நூல் 1923ம் ஆண்டில் 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டவை அனைத்தும் தீர்ந்தமையால் 2ம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மக்கள் மனதில் பலவாறாக திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க வைப்பதும் சரியான இலக்கை நோக்கி சிந்திக்க வைப்பதும் இந்த நூலின் நோக்கம் என மறைமலை அடிகள் இந்த நூலின் முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிகின்றார். இதில் கையெழுத்துப் பகுதியில் இவரது வேதாச்சலம் என்ற இயற்பெயர் வழங்கப்பட்டுள்ளது. 
அயல்னாட்டினர் சமஸ்கிருதத்தை படித்து ஆய்வு செய்த அளவில் பாதியாவது தமிழை ஆய்வு  செய்திருந்தால் அவர்களது ஆய்வுகளின் பலன் தமிழ் வரலாற்றிற்கு மிகுந்த பலனை அளித்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.

நூலின் பொருளடக்கத்தில் சில 

  • வேளாளர் வாழ்க்கை
  • ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை
  • ஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி
  • ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல்
  • வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையுங் கொண்டாடல்
  • தொல்காப்பியரும் வேளாளரும்
  • வடனாட்டிற் குடியேறிய வேளாளர்
  • இந்தியாவின் வடமேற்கில் குடிபுகுந்த ஆரியரின் புலையொழுக்கம்
  • வேளாளார் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுனூல்கள் இயற்றினமை
  • மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றமை பொருந்தாமை
  • நடுனிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை
  • உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை
  • தமிழர்கள் உபனிடதம் சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை
....



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 420

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி 
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES