திருப்பாவை - 06

0 மறுமொழிகள்

திருப்பாவை - 6

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்
சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம்



புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.


Thiruppavai - 6
Raga : Sankarabharanam, Misra Chapu

Look the birds have begun their morning song
O young girl arise! Do you not hear the great boom of the white temple conch
He who drained the ogress Putana's poisoned breasts and
kicked the cart that ran amuck,
He lies reclining in the Ocean.
Sages and Yogis hold him in their hearts and gently utter "Hari".
This sound enters our hearts and makes us rejoice.

[Picture shows that the birds have arisen, the priest blowing the temple conch, ascetics are worshipping the lord. In the panel above, a girl lies in her sumptuous bed. Andal rouses her by touching her gently.]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 06"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES