திருப்பாவை - 11

0 மறுமொழிகள்

திருப்பாவை - 11



அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?
உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்
பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!
பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா
உறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்
உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.
அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே!
உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்!



Thiruppavai - 11
Raga: Huseni, Misra chapu

O Golden bower of the faultless Kovalar folk
who milk many herds of cows, and battle victoriously in wars
O snake slim-waisted peacock-damsel!
come join us ! The neighborhood playmates have all gathered in your portion to sing the names
of the cloud-hued lord.
You lie, motionless and still
O precious maid, what sense does this make ?
come quickly

[ Picture shows, the door is open, some girls have collected outside and are chanting the lords name. The girl in the bed lies without speaking, without moving. Andal hints gains power by very auspicious adjectives she juxtaposes to wake the girl]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 11"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES