THF Announcement: ebooks update: 10/8/2014 *தென்னாட்டுப் பேரரசர்*

0 மறுமொழிகள்


வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  தென்னாட்டுப் பேரரசர்
ஆசிரியர்: புலவர் W.V.குப்புசாமி (சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்)

நூல் வெளிவந்த ஆண்டு : 1947

நூல் குறிப்பு:   
இந்த நூல் சேரன் செங்குட்டுவன், பல்லவன் நரசிம்மன், சோழன், இராஜராஜன் என்னும் பேரரரசர் மூவரின் வரலாற்றை எளிய நடையில் சுருக்கமாக வழங்குகின்றது. சங்க கால அரசனான செங்குட்டுவன் (கி.பி 150-200), இடைக்கால அரசனான நரசிம்மன் (கி.பி 630-668), பிற்கால அரசனான இராஜராஜன் (கி.பி 985 - 1014) ஆகிய இம்மூவர் வரலாறு தமிழகத்தின் நடைமுறைகளையும் நாகரிகத்தையும் அறிய உதவும் வகையில் ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட நூல் இது.




இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 390

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 10/8/2014 *தென்னாட்டுப் பேரரசர்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES