Fwd: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!

0 மறுமொழிகள்



---------- Forwarded message ----------
From: shylaja <shylaja01@gmail.com>
Date: 2009/12/25
Subject: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!


அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட
அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது
ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
அனைவரையும் கவர்ந்தது.

மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி
மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்
மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.

தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது- அந்த
எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
மண்ணில் உதித்த நாள் இன்று!
 
******************************************************************************************************************

--
ஷைலஜா
///
.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
 வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே////
 
திரைப்பாடல்.
 
Aum
 


 

-- 

மறுமொழிகள்

0 comments to "Fwd: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES