திருப்பாவை - 21

0 மறுமொழிகள்

திருப்பாவை - 21




உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!
நாதநாமக்கிரியா ராகம், மிச்ரசாபு தாளம்

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய
தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை
அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக்கொள்!
சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்
அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.
எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்
கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல
நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

Thiruppavai - 21
Raga: Nandanamakriya, Misra Chapu

Wake up, O son-of-the-cow-herd chief
Who bears prized cows that pour milk
incessantly into canisters over-flowing
Wake up, O strong one, O great one,
who stands like a beacon to the world.
We stand at your door like vassals
who accept defeat and come to pay homage to you.
We have come to you , singing your praise and proclaiming your greatness.

[ Picture shows the girls approach Krishna separately. They touch and praise him for his wealth, valour and wisdom and his wondrous deeds]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 21"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES