THF Announcement: ebooks update: 5/10/2013 *சுப்பிரமணிய தேசிகர் மாலை*

0 மறுமொழிகள்



வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

சுப்பிரமணிய தேசிகர் மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 352

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி




திருவாவடுதுறை மடத்தில் நான் சென்றிருந்த வேளையில் மடத்தின் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்களுடன் மடத்தின் நிர்வாகஸ்தினர்களும் ஆசிரியர்களும் இருப்பதை இப்படத்தில் காண்கின்றோம்.

அக்காலத்தில் சுப்பிரமணிய தேசிகரும் நல் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற சிறந்த எண்ணம் கொண்டு செயலாற்றினார்கள். அவர்கள் விருப்பபடி தற்சமயம் பள்ளிகள் மடத்தின் சார்பில் நடைபெற்று வருவது மகிழ்ந்து போற்றக்கூடிய ஒன்று.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 5/10/2013 *சுப்பிரமணிய தேசிகர் மாலை*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES