Showing posts with label thiruppavai. Show all posts
Showing posts with label thiruppavai. Show all posts

திருப்பாவை - 05

0 மறுமொழிகள்
திருப்பாவை - 5

கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்
ஸ்ரீ ராகம் , ஆதிதாளம்



மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.

மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம் முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும் ஆகவே அவன் நாமங்களைச் சொல்!



Thiruppavai - 5
Raga : Sri, Adi

Kirshna, prince of Northern Mathura
who haunts the clean banks of Yamana
who took birth like a beacon among the cowherd clan
the jewel of his mother's womb
if we come pure and strew fresh flowers
with songs on our lips, feeling in our hearts
then he will forgive our past misdeeds and even what remains
will disappear like cotton unto fire
So come, let us praise him

[Picture shows Andal herself being worshipped, alongside Rangammannar her consort as in the temple at Srivilliputtur ]


src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?

soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_05.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&

rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au

tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash'

wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 02

0 மறுமொழிகள்
திருப்பாவை - 2

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்



வஸந்த ராகம், ஆதிதாளம்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்
இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.



Thiruppavai - 2

Raga : Vasantha, Adi

O people of the world, hear what austerities we undertake during the pavai-nonbu
Singing the praise of the Ocean reclining lord.
We will abstain from milk and ghee and bathe before dawn.
We shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers.
Refraining from forbidden acts, avoiding evil tales about others, we give alms and charity in full measure and
pray for the elavation of spirit. Let us rejoice.\\
[ Picture shows Andal is seen teaching the regimen of the pavai Nonpu to two aspiring friends. Vishnu lies floating on a the deluge waters on a fig leaf. He is attended by his sposes Sri Bhu and Nila ]



src='http://img227.imageshack.us/img227/3087/playergv1.swf?

soundFile=http://www.tamilheritage.org/media/audio/tirupavai/tpavai_krish_upanyasam_02.mp3&bg=0xCDDFF3&leftbg=0x357DCE&lefticon=0xF2F2F2&rightbg=0x357DCE&

rightbghover=0x4499EE&righticon=0xF2F2F2&righticonhover=0xFFFFFF&text=0x357DCE&slider=0x357DCE&track=0xFFFFFF&border=0xFFFFFF&loader=0x8EC2F4&au

tostart=no&loop=no' width='290' height='24' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash'

wmode='transparent'>



திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

திருப்பாவை - 01

0 மறுமொழிகள்
திருப்பாவை - 1

நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல்




பெளளி ராகம், ஆதிதாளம்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*)

மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\\

(*) திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப் பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" ( திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது




Thiruppavai - 1

Raga: Bowli, Adi

In the Month of Margazhi of auspicious full-moon day
bejeweled girls who would join us for the bath!
come along prosperous young girls of Ayarppadi
Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and fierce
deeds ( towards enemies)
He is the darling-child, lion-cub of beautiful-eyed Yosada.
our dark-hued, lotus-eyed, radiant moon-faced Narayana alone will grant us our boons.
Girls come assemble for the paavai nonbu and win the world's praise.\\

[Picture shows Andal is extending an invitation to all the folk in her village to join her in the Margazhi bath festival. Krishna, the foster child of Yesodha and Nandagopala is identified with Narayana the cosmic lord Vishnu. He has four arms, bears the conch and discus, and sits on a serpent couch in Vaikuntha, guiding the souls seeking him. His consorts Bhu and Nila, seated on either side attend him.]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி
உபன்யாசம்: வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES