மண்ணின் குரல்:நவம்பர் 2014: அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்

0 மறுமொழிகள்

வணக்கம்.

மண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.

அருள்மிகு பன்னாரி அம்மன் கோயிலுக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் சென்றிருந்த போது செய்த பதிவு இது. காட்டிற்குள் இருக்கும் பன்னாரி அம்மன் கோயிலுக்குள் செல்ல இயலாத போதும் சாலையோரத்தில் அமைந்திருக்கும் பன்னாரி அம்மன் கோயிலை மட்டும் தரிசித்து வந்தோம்.



இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்பிரசித்தி பெற்றது.

ஆலயத்தின் வாசல் புறத்தில் உப்பு கொட்டி வைத்திருக்கின்றனர். வேண்டுதலுக்காக வருகின்ற பக்தர்கள் தாங்களும் உப்பு கொட்டி வேண்டுதல் செய்கின்றனர். சற்று தள்ளி ஒரு தனிப்பகுதியில் சிறிய பன்னாரி அம்மன் உருவச் சிலையும் ஊஞ்சலும் இருக்கின்றது. இங்கு பெண்கள் வந்து ஊஞ்சலை ஆட்டி வேண்டுதல் செய்து செல்கின்றனர்.



இந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரி. அவர் கணவருக்கும், நம் நண்பர் ஆரூரனுக்கும் இவ்வேளையில் என் நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இவ்விழியப்பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/11/blog-post_28.html

யூடியூபில் இதே பதிவைக் காண:http://www.youtube.com/watch?v=iZSDtSqL9S8&feature=youtu.be

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்:நவம்பர் 2014: அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES