மண்ணின் குரல் 20ம் நூற்றாண்டு ஆரம்ப கால மலாயா செய்திகள்

1 மறுமொழிகள்

வணக்கம்.

மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்  சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது. 



மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். இவருடன் ஒரு பேட்டியை இவ்வருடம் ஜனவரியில் மலேசியாவில் இருந்த சமயத்தில் பதிவாக்கினேன். 

இப்பேட்டியில்:
  • 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை
  • திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள்.
  • மலேசிய தமிழ் பத்திரிக்கைகள்
  • திராவிடர் கழகத் தாக்கத்தால் தமிழ் முயற்சிகள்
  • தமிழர் திருநாள் - கோ.சாரங்கபாணி
  • இசை ஆர்வம் - சகோதரர் ரெ.சண்முகம்
  • இந்தியர் என்ற அடையாளம் 
  • மலேசிய இலக்கிய முயற்சிகள் 
  • இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள்
  • முதல் நாவல் - பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை..
  • ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்கள் நிலை
  • தற்காலத் தமிழர்களின் நிலை, வளர்ச்சி
  • மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2015/04/20.html

யூடியூபில் இப்பதிவைக் காண:     https://www.youtube.com/watch?v=_8_Kl_e0eyU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 37  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

1 comments to "மண்ணின் குரல் 20ம் நூற்றாண்டு ஆரம்ப கால மலாயா செய்திகள்"

Unknown said...
October 25, 2018 at 7:38 PM

like

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES