மண்ணின் குரல்: மே 2015: இலங்கை போருக்குப் பின் தமிழர் மீள்குடியேற்றம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம்

அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சென்று விட்ட ஒரு நிலை என்பது ஒரு புறமிருக்க இலங்கைக்குள்ளேயே அகதி முகாம்களில் தமிழர்கள் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்பது இன்னமும் தொடரும் அவலம்.





  • அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனரா?
  • அவரவர் நிலங்களில் மீண்டும் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
  • யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி மேலும் பல தமிழர் பகுதிகளில் தற்சமயம் தமிழர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?
  • போருக்குப் பிந்திய தொடர் சமூக அவலங்கள் யாவை?
  • குழந்தைகளின் கல்வி எவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?
  • பெண்களின் பாதுகாப்பற்ற நிலை?
  • இன்னமும் அரசு செய்ய வேண்டியவை யாவை?

 
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இந்தப் பேட்டி. இப்பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்குகின்றார் இலங்கை தமரசு கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை சோனாதிராஜா அவர்கள்.


இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

ஒரு மணி நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2015/05/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=PjcPBk8oVi4&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 3/05/2015 *ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள்*

0 மறுமொழிகள்
​வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள்
எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர்: இ.இனியன்


22 அத்தியாயங்களில் பிரசங்கங்கள் அமைவதாக அமமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலைப் பற்றி வெ. சாமிநாத சர்மாவின் கூற்று..
வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றளவும் வழி காட்டியாக வாழ்பவன் திரேஸ் (கிரேக்கம்).  கிரேக்க வரலாற்றில் மிக உயர்வான காலத்தில் வாழ்ந்தவன். கல்வியறிவும் படைப்பயிற்சியும் பெற்றவன். 8 நூல்கள் எழுதியவன். இதில் இராஜதந்திர யுத்தக்களப் பிரசங்கங்கள் எனும் இந்த நூலும் அடங்கும்.

இந்த நூல் அரசியலில் ஈடுபாடுகொண்ட ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய நூல். 

அரசியலில் எதிர்கொள்ளும் பன்முகச் சிக்கல்கள் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆளும் நிலையில் உள்ளவர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிய உதவும் நூல்.


அறிஞர்கள் என்று யாரைப் புகழ்ந்து பேசுகிறோமோ அவர்களிடத்தில் ராஜ்ய காரியங்களை ஒப்புவித்தால் அவர்கள் அந்தக் காரியங்களைத் திறம்படச்
செய்வார்களா திறமையான பேச்சாளர்கள் திறமையாகக் காரியங்களைச்
சாதிப்பார்களா? உடனே செயல்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி, புத்தி
ஒன்றையே பிரதானமாக உடையவர்கள் அபிப்பிராயம் சொல்வார்களானால் அந்த
அபிப்பிராயம் சரியானபடி இருக்குமா? அந்த அபிப்பிராயப்படி நடக்க முடியுமா?
அதிகமாகச் சிந்தனை செய்தால் காரியத்திற்குக் குந்தகம் ஏற்படாதா? அதிகார
பதவியிலிரு்க்கிறவர்கள் பிரஜைகளை எப்படி நடத்த வேண்டும்? அன்பாக
நடத்தினால் நல்லதா, கடுமையாக நடத்தினால் நல்லதா அரசியலில் விட்டுக்
கொடுப்பதன் மூலம் வெற்றி காண முடியுமா? அல்லது பிடிவாதத்துடன் கடைசி
வரையில் போராடினால்தான் வெற்றி கிடைக்குமா? இன்னோரன்ன  பிரச்சனைகள் பல பிரசங்கங்களினூடே தோன்றி அரசியல்வாதிகளின் சிந்தனையைத் தூண்டி விடக் கூடியனவாயிருக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே பிரசங்கங்கள் மட்டும் பொறுக்கி எடுத்து நூலாகத் தரப்பட்டுள்ளது.
- வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி என்ற நூலிலிருந்து... - பெ. சிவசக்தி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 416

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  (சுந்தரராஜன் ஜெயராமன், கோயம்புத்தூர்)


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​


THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*

9 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன் (மூலமந்திர அந்திரத்துடன்)
எழுதியவர்: ப.வடிவேலு செட்டியார் அவர்களால் பண்டைய ஏட்டுப்பிரதியைக் கொண்டு எழுதப்பெற்றது
பதிப்பாளர்: மதுரை முதலியார் ஷ்ண்முகானந்தா புத்தகசாலை, மதறாஸ்

நூல் குறிப்பு:  

உச்சாடத்திற்கு உரிய மலையாள மந்திரங்கள் யந்திரங்களுடன் உள்ளன.

இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக வழங்கியவர் டாக்டர்.கி.லோகநாதன் அவரகள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 415

மின்னாக்கம்:  சுபாஷிணி
மின்னூலாக்கம்: சுபாஷிணி


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​



மண்ணின் குரல்: ஏப்ரல் 2015:தென்னாப்பிரிக்காவில் தமிழ்க்கல்வி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

மாலா லட்சுமணன் - தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் மூன்றாவது சந்ததியைச் சேர்ந்தவர். 180 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கின்றார். முதுகலையும் முடித்து தற்சமயம் முனைவர் பட்ட ஆய்வினை தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க சூலு இன மொழிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்து வருகின்றார்.

தென்னாப்பிரிக்க இந்தியத்தூதரகம் நடத்தும்  மொழி வகுப்பில் இவர் தமிழாசிரியராக பணிபுரிகின்றார்.

தென்னாப்பிரிக்க இந்திய தூதரகத்தில் ஹிந்தி மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழிக்கு கட்டணம் கட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பணம் கட்ட வேண்டுமென்பது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இங்கு காட்டப்படும் பாரபட்ஷம் தான் மனதை உறுத்துகின்றது. இது ஒரு மானப்பிரச்சனை என்று குறிப்பிடுகின்றார். 

பேட்டியைக் கேட்டுப் பார்க்கவும்.

இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/04/blog-post.html
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=3wiscFDD4cE&feature=youtu.be


​மாலா, நான், ப்ரேமி

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 1 ஏப்ரல் 2015

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக வெளிவர உள்ள இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழக எல்லைக்கப்பால் தவழும் தமிழ்ப்பண்பாடு என்பதாகும்.





மின்னிதழை வாசிக்க!!


அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த  சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே  இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல் 20ம் நூற்றாண்டு ஆரம்ப கால மலாயா செய்திகள்

1 மறுமொழிகள்
வணக்கம்.

மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்  சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது. 



மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். இவருடன் ஒரு பேட்டியை இவ்வருடம் ஜனவரியில் மலேசியாவில் இருந்த சமயத்தில் பதிவாக்கினேன். 

இப்பேட்டியில்:
  • 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை
  • திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள்.
  • மலேசிய தமிழ் பத்திரிக்கைகள்
  • திராவிடர் கழகத் தாக்கத்தால் தமிழ் முயற்சிகள்
  • தமிழர் திருநாள் - கோ.சாரங்கபாணி
  • இசை ஆர்வம் - சகோதரர் ரெ.சண்முகம்
  • இந்தியர் என்ற அடையாளம் 
  • மலேசிய இலக்கிய முயற்சிகள் 
  • இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள்
  • முதல் நாவல் - பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை..
  • ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்கள் நிலை
  • தற்காலத் தமிழர்களின் நிலை, வளர்ச்சி
  • மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2015/04/20.html

யூடியூபில் இப்பதிவைக் காண:     https://www.youtube.com/watch?v=_8_Kl_e0eyU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 37  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: மார்ச் 2015:​ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் - விழுப்புரம் மாவட்டம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. 



மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும் இந்தச் சிற்பத்தைக்  காணலாம். 
இங்கு தற்போது இருக்கும் ஆலயம் ஏறக்குறைய 800 ஆண்டு பழமையானது என ஆலய நிர்வாகத்தார் குறிப்பிடுவதையும், ஆயினும் அப்பகுதியில் அதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆதிநாதர் ஆலயம் இருந்தது என்பதனைக் காட்டும் பழமையான கருங்கற் சிலைகளும் இதே ஜினாலயத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்சமயம் இந்த ஆலயத்தில் யுகாதி பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.

உழவுத் தொழில் என்று மட்டுமல்லாது பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுத்து வாழ்விற்கு ஆதாரம் உழைப்பு என சொல்லிக் கொடுத்தவர் ஆதிநாதர் என ஆலய நிர்வாகி குறிப்பிடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

இந்தப் பேட்டியில் மேலும்..
  • தீர்த்தங்கரர் உருவங்கள், அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன
  • யட்ஷன் யட்ஷி பற்றிய விளக்கம்
  • இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயாரின் வழிபாடு 
  • தீர்த்தங்கரர்கள் அவர்களின் எண்ணிக்கை.தனித்தனியாக 
  • பாகுபலி.. 
  • ஆதிநாதர்..
  • நேமிநாதர்
  • பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற விளக்கம்
  • தீர்த்தங்கரர் உடலில் பதிக்கப்படும் முக்கோண வடிவின் விளக்கம்
  • படிப்படியான சடங்குகளின் விளக்கம்
  • சிலைக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய பண்டிதர்கள் ..
  • யந்திரம்
  • இங்கே ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
  • கந்தவர்கள் தேரை இழுத்துக்கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் தங்கத்தேர்
பதிவு 20 நிமிடங்கள் கொண்டது. முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பதிவில் விளக்கம் தொடரும்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/03/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=7wdAzKug7ik&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 20 நிமிடங்கள் கொண்டது.

குறிப்பு: இந்தப் பதிவினை நான் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகச் செய்ய உதவிய மேல்சித்தாமூர் ஜைன மடத்திற்கும் மடத்தின் தலைவருக்கும், நண்பர்கள் பிரகாஷ் சுகுமாரன், இரா.பானுகுமார், ஹேமா ஆகியோருக்கும், என் உடன் வந்திருந்து பல தகவல்களை வழன்கி உதவிய டாக்டர்.பத்மாவதி அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES